ரெயில் மோதி உயிரிழந்த தமிழர்கள்.. ரூ. 3 லட்சம் அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்

நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ரெயில் மோதி உயிரிழந்த தமிழர்கள்.. ரூ. 3 லட்சம் அறிவித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on

கேரளா மாநிலம் பாலக்காடு, ஷோரனூர், பாரதப்புழா பாலம் அருகே நேற்று கேரளா எக்ஸ்பிரஸ் ரெயில் மோதிய விபத்தில் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் ஷோரனூர் பகுதியில் ரெயில்வே பாலத்தில் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்தபோது ரெயில் மோதியதால் தமிழ்நாட்டைச் சேர்ந்து துப்பரவு பணியாளர்கள் நான்கு பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு பேரின் குடும்பத்தாருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ. 3 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com