search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamil nadu vanigar sangam peramaippu"

    மத்திய-மாநில அரசுகளை கண்டித்து நாளை விக்கிரமராஜா தலைமையில் கருப்பு சட்டை அணிந்து மண்டலம் தோறும் வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.
    சென்னை:

    சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உணவு தர நிர்ணய பாதுகாப்பு சட்டத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை திருத்தக் கோரியும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் அகில இந்திய வணிகர்கள் சம்மேளனம் சார்பில் நாளை இந்தியா முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

    தமிழ்நாட்டில் கடை அடைப்புக்கு பதிலாக கருப்பு சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரம ராஜா அறிவித்திருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் கருப்பு சட்டை அணிந்து மண்டலம் தோறும் நாளை வணிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

    வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு மண்டலத் தலைவர் கே.ஜோதிலிங்கம் தலைமை தாங்குகிறார். சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் என்.டி.மோகன் முன்னிலை வகிக்கிறார்.

    இதில் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா விளக்கவுரை நிகழ்த்துகிறார். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா வி.பி.மணி, ராஜ்குமார், எட்வர்டு, நடராஜன், மகேஸ்வரன், செய்தி தொடர்பாளர் பாண்டியராஜன் மற்றும் எஸ்.சாமுவேல் உள்ளிட்ட மாவட்டத் தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்கிறார்கள்.

    வணிகர்களின் கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் இதன் அடுத்தகட்ட போராட்டமாக உண்ணாவிரத போராட்டம், சட்டமன்ற முற்றுகை போராட்டம், தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு அறிவித்துள்ளார்.
    ×