என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Taluk Office Siege"

    • அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
    • மக்கள் அனைவரும் திரண்டு சென்று அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை ஒன்றியம் வாகைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஆர்.டி.ஓ. அலுவலகத்திற்கு அருகில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது.

    டாஸ்மாக் கடை

    இதில் அம்பை, வி.கே.புரம் பகுதி பயனாளிகள் குடியிருந்து வருகின்றனர். இந்த அடுக்குமாடி குடியிருப்பிற்கு செல்லும் வழியில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. இதனால் குடியிருப்பு வாசிகள், பெண்கள், குழந்தைகள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்.

    மேலும் சுமார் 400-க்கும் அதிகமான குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை. சுகாதார தேவைகள் எதுவும் சரிவர செய்து தரப்படவில்லை எனக்கூறி பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதியினர் புகார் கூறி வந்தனர்.

    இந்நிலையில் மக்கள் அனைவரும் திரண்டு சென்று அம்பை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்களிடம் தாசில்தார் விஜயா பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரை செய்வதாக சமாதானம் செய்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்க தலைவர் ராஜகோபால், பொரு ளாளர் வணங்காமுடி, சமூக ஆர்வலர் ரஹ்மான் சேட், துணைத்தலைவர் நெல்லையப்பன், செயலாளர் மனோ சித்ரா, இணை செயலாளர் மாரி செல்வி, சண்முகசுந்தரம், ஏசையா, ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் தாசில்தாரிடம் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

    • தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
    • விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ந் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    சேலம்:

    தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    அதன்படி கடந்த 15-ந் தேதி தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடி பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

    இந்த நிலையில் இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்த சுமார் 56 லட்சம் பெண்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் கடந்த 18-ந் தேதி முதல் 30 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

    அதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களின் இ-சேவை மையங்களில் கலைஞர் மகளிர் உரிமை தொகை கிடைக்காத பெண்கள் இன்று முதல் மேல்முறையீடு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய ஏராளமான பெண்கள் வந்திருந்தனர். அப்போது வட்டாச்சியர் அலுவலகத்தின் இ-சேவை முடங்கியது. இதனால் நீண்ட நேரம் காத்திருந்த பெண்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    முற்றுகை

    தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகையிட முயன்றனர். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு உடன்படாமல் பெண்கள் தொடர்ந்து அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிட்ம அதிகாரிகள் கூறும்போது, இ-சேவை முடங்கியதால் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய முடியவில்லை. இது சரியானதும் அனைவரும் காத்திருந்து விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர்.

    ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாக கூறி சங்கரன்கோவிலில் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.

    சங்கரன்கோவில், செப்.18-

    சங்கரன்கோவில் தாலுகா வன்னிக்கோனேந்தல் அருகே கீழ நரிக்குடி, மேல நரிக்குடி கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதாகவும், முறைகேடு நடப்பதாகவும் கூறி அப்பகுதி கிராம மக்கள் சங்கரன்கோவில் தி.மு.க. செயலாளர் ராஜதுரை தலைமையில் சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    இதில் நகர இளைஞரணி அமைப்பாளர் சரவணன், தகவல் தொழிற்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் குமார், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் டைட்டஸ், இளங்கோ மற்றும் கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். முற்றுகையிட்ட கிராம மக்களுடன் சிவில் சப்ளை தாசில்தார் மாரிமுத்து மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதின்பேரில் முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    ×