என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பூர் பெண் பலி"
- 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், வீரர்களை காணும் ஆர்வத்தில் சென்று நெரிசலில் சிக்கியுள்ளார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொண்டது.
இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வெற்றி பெற்று, கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இதனால் அந்த அணி ரசிகர்கள் மட்டுமின்றி, கர்நாடக மக்களும் அந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.
இதையடுத்து பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் வீரர்களை காணும் ஆர்வத்தில் சிறுவர், சிறுமிகள், இளம்பெண்கள் என குடும்பத்தினருடன் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த காமாட்சி தேவி(28) என்பவர் உயிரிழந்துள்ளார். அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவர், வீரர்களை காணும் ஆர்வத்தில் சென்று நெரிசலில் சிக்கியுள்ளார். இன்று பிற்பகல் 2 மணிக்கு காமாட்சி உடல் பெங்களூருவில் இருந்து உடுமலைப்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுகிறது. காமாட்சி தேவியின் தந்தை மூர்த்தி உடுமலைப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தாளாளராக உள்ளார்.
திருப்பூர் பெருமாநல்லூர் கணக்கம்பாளையம் செல்லும் பாதையில் பாறைக்குழி உள்ளது. இன்று காலை பாறைக்குழி தண்ணீரில் பெண் மற்றும் ஒரு சிறுமி பிணமாக கிடப்பதாக பெருமாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர்கள் குறித்து விசாரிக்கும் போது கணக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த உமா (வயது 28), காவ்யா(15) என்பது தெரியவந்தது.
பாறைக்குழியில் இறங்கி குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றதன் காரணமாக தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி 2பேர் பலியான சம்பவம் திருப்பூர் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.