என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10-ம் வகுப்பு மாணவி"

    • ஆர்த்தி வீட்டில் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
    • சித்தோடு போலீசார் தற்கொலைகான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்கராயன்பாளையம் பாரதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி சரண்யா. இவர்களது மூத்த மகள் ஆர்த்தி (14). இவர் பவானி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ஆர்த்தி டியூஷன் சென்று விட்டு வீட்டுக்கு வந்து சென்னை யில் இருந்து ஊர் திரும்பிய தனது தாயுடன் இரவு சுமார் 9.45 மணியளவில் போனில் தொடர்பு கொண்டு பேசி உள்ளார்.

    பின்னர் ஆர்த்தி வீட்டில் பாட்டி மற்றும் தம்பி ஆகியோர் இருந்த நிலையில் சமையல் அறையில் ஓட்டு மர சட்டத்தில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே மாணவி ஆர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்வு சரியாக எழுதவில்லை என 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    பட்டுக்கோட்டை:

    பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சூரிய பாண்டி மகள் யோகேஸ்வரி (வயது 15). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர்.

    தேர்வு எழுதிய மாணவி மாலை வீட்டிற்கு வந்து தேர்வு சரியாக எழுதவில்லை என பேசிக்கொண்டிருந்தார். மனஉளைச்சலில் இருந்த மாணவி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

    இதைக்கண்ட தாயார் செல்லம்மாள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் சீனிவாசன் மனைவி சித்ரா (51) ஆகியோர் சேர்ந்து கதவை உடைத்து மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். 

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×