search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Move"

    வ.உ.சி. பிறந்தநாளையொட்டி செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பஸ்சில் அமைக்கப்பட்டுள்ள நகரும் புகைப்படக் கண்காட்சி பஸ்சை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    நெல்லை:

    கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அரசு பேருந்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நகரும், புகைப்படக் கண்காட்சி பேருந்து இன்று நெல்லை மாவட்டத்திற்கு வந்தது.

    அதனை கலெக்டர் விஷ்ணு கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வை யிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழக அரசு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினை பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

    செய்தி மக்கள் தொடர்புத்துறையினர் சார்பில் குளிரூட்டப்பட்ட அரசு பஸ்சில் நகரும் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் செல்லும் வகையில் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இந்த நகரும் புகைப்பட கண்காட்சி பேருந்தானது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் இருக்கும் மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் நேரடியாக சென்று ஏராளமான மாணவ - மாணவிகளால் பார்வையிடப்பட்டு வருகிறது.

    இந்த பேருந்தானது இன்று நமது மாவட்டத்திற்கு   வந்துள்ளது. இன்று முதல் வருகிற  3-ந் தேதி வரை நமது மாவட்டத்திலுள்ள பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவ, மாணவிகள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகள் வ.உ.சிதம்பரனார் வரலாறு குறித்த புகைப்பட கண்காட்சியை கண்டுகளித்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட நூலகர் மீனாட்சி சுந்தரம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயஅருள்பதி, நூலகர் (ஓய்வு) முத்துகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×