search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Young Lady"

    நெல்லை அருகே உள்ள தேவர்குளத்தில் பெற்றோர் கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    நெல்லை:

    தேவர்குளம் அருகே உள்ள சுண்டங்குறிச்சி மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அமல்ராஜ். கூலி தொழிலாளி. இவரது மகள் சினேகா (வயது 19).

    இவர் பிளஸ்-2 வரை படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.  இவர் அடிக்கடி செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர்.

    சம்பத்தன்று சினேகா விஷம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.  இது தொடர்பாக மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எடப்பாடி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் திடீரென மாயமானார்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணம்பட்டி ஊராட்சி, மோட்டூர் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி இவரது மகள் தமிழரசி(23) இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றது. 

    இத்தம்பதியினருக்கு 2 வயது மற்றும் 6 மாதத்தில் என இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 
    இந்நிலையில் பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு வந்த தமிழரசி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பெற்றோருடன் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசி தனது 6 மாத கைக்குழந்தையுடன் திடீரென மாயமானார். 

    கை குழந்தையுடன் மாயமான தமிழரசியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் அவர் கிடைக்காத நிலையில்,கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

    புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன தமிழரசியை யாரேனும் வற்புறுத்தி அழைத்துச் சென்றார்களா? அல்லது அவர் வேறு எதேனும் குடும்ப பிரச்சினைக்காக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    ×