என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » tag 330541
நீங்கள் தேடியது "ஸ்கூட்டி"
களஞ்சேரி அருகே சாலை விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியாார்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இடையிறுப்பு குடியான த்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி ராமு (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலசுப்ரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராமு குழந்தைகளுடன் இடையிறுப்பில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று ராமு காலையில் இடையிறுப்பு கிராமத்தில் இருந்து ஸ்கூட்டியில் தஞ்சைக்கு சாலியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். களஞ்சேரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக ராமு ஓட்டிச்சென்ற ஸ்கூட்டி லாரியின் பக்கவாட்டில் சிக்கி நிலை தடுமாறி விழுந்ததில் ராமு லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்குராமுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X