search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்தில் பலியான ராமு.
    X
    விபத்தில் பலியான ராமு.

    லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலி

    களஞ்சேரி அருகே சாலை விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி பெண் பலியாார்.
    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுக்கா இடையிறுப்பு குடியான த்தெருவை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். இவரது மனைவி ராமு (வயது 35). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பாலசுப்ரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ராமு குழந்தைகளுடன் இடையிறுப்பில் வசித்து வந்தார்.

    சம்பவத்தன்று ராமு காலையில் இடையிறுப்பு கிராமத்தில் இருந்து ஸ்கூட்டியில் தஞ்சைக்கு சாலியமங்கலம் சாலையில் சென்று கொண்டிருந்தார். களஞ்சேரி அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக ராமு ஓட்டிச்சென்ற ஸ்கூட்டி லாரியின் பக்கவாட்டில் சிக்கி நிலை தடுமாறி விழுந்ததில் ராமு லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

    அவரை அருகில் இருந்த வர்கள் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

    அங்குராமுவை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×