என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொத்தனார் கொலை"
- உத்தமபாளையம் அருகே தாய் மாமனை கல்லால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் கொத்தனார் அடித்துக் கொலை
உத்தமபாளையம்:
உத்தமபாளையம் அருகே தாய் மாமனை குடிபோதையில் கல்லால் தாக்கி கொன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி பேரூராட்சி கோவிந்தன்பட்டியைச் சேர்ந்தவர் மரியதாஸ் (வயது 60). கொத்தனார் வேலை பார்த்து வந்தார்.
இவரது தங்கை செல்வி. இவருக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். அதன் பிறகு செல்வியின் மகன் ஜெயக்குமார் (22) தனது மாமா மரியதாஸ் வீட்டிலேயே வளர்ந்து வந்தார்.
சரி வர வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தனது மாமாவிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்துள்ளார். நேற்று இரவு அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. குடி போதையில் இருந்த ஜெயக்குமார் தனது மாமாவை தரக்குறைவான வார்த்தைகளால் பேசினார்.
மேலும் ஆத்திரமடைந்து பேவர் பிளாக் கல்லால் ஓங்கி தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த மரியதாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். மரியதாஸ் உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய ஜெயக்குமாரை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்