search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு குடோன் விபத்து"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குடோனில் இன்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
    • குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அடுத்த குருவி மலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. சுமார் 30-க்கும் மேற்பட் டோர் வேலைபார்த்து வருகிறார்கள்.

    இங்குள்ள குடோனில் இன்று மதியம் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் இருந்த பட்டாசுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

    குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் சிக்கி படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 பெண்கள் உள்பட 6 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் படுகாயமடைந்தோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பட்டாசு குடோன் வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை தற்போது 8 ஆக உயர்ந்துள்ளது.

    ×