search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suspect"

    • கடந்த 16-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளை குடியிருப்பின் முன்பு நிறுத்தி இருந்தார்.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை,

    கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கான குடியிருப்பு உள்ளது.

    இங்கு ஆயுதப்படை போலீசார் மற்றும் கோவை மாநகரம், மற்றும் புறநகர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 16-ந் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பின் முன்பு நிறுத்தி இருந்தார்.

    அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். செல்வகுமார் பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

    ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு அதிகம் இருக்கும் போலீஸ் பயிற்சி வளாகத்திற்குள் நுழைந்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் கோவை போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • முக கவசம் கண்டறியும் செயலி மூலம் சோதனை நடத்தினர்.
    • முழு விவரம் உடனடியாக தெரிய வருகிறது.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பொறுப்பு மற்றும் போலீசார் நேற்று இரவு பண்ருட்டி ரயில் நிலையம், பண்ருட்டி பஸ் நிலையம், திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மாட வீதி பகுதியில் தீவிர ரோந்து பணியில்ஈடுபட்டனர். அப்போது- சந்தேகத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த நபர்களைப் பிடித்து முக கவசம் கண்டறியும் செயலி மூலம் சோதனை நடத்தினர். இந்த முக அடையாளம் காணும் செயலி குறித்து இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கூறியதாவது:- குற்றங்களைக் கண்டுபிடிக்கவும், குற்றத் தடுப்புப்பணிகளை செவ்வனேமேற்கொள்ளவும் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள எப்ஆர்எஸ் செயலி சந்தேக நபரின் முழு விவரம் உடனடியாக தெரிய வருவதால் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளுக்கு இந்த செயலி மிகவும் உதவியாக உள்ளதுஎன்றார்.

    ×