search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்
    X

    கோவையில் சப்-இன்ஸ்பெக்டர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்மநபர்

    • கடந்த 16-ந் தேதி இரவு மோட்டார் சைக்கிளை குடியிருப்பின் முன்பு நிறுத்தி இருந்தார்.
    • ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    கோவை,

    கோவை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் போலீசாருக்கான குடியிருப்பு உள்ளது.

    இங்கு ஆயுதப்படை போலீசார் மற்றும் கோவை மாநகரம், மற்றும் புறநகர் மாவட்டத்தில் பணிபுரியும் போலீசார் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் செல்வக்குமார். இவர் தனது குடும்பத்துடன் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார்.

    இவர் கடந்த 16-ந் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளை போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள குடியிருப்பின் முன்பு நிறுத்தி இருந்தார்.

    அந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர் ஒருவர் திருடி சென்றார். செல்வகுமார் பல இடங்களில் தேடியும் மோட்டார் சைக்கிள் கிடைக்காததால் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார்.

    ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போலீஸ் பயிற்சி பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதனை வைத்து அந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பாதுகாப்பு அதிகம் இருக்கும் போலீஸ் பயிற்சி வளாகத்திற்குள் நுழைந்து, சிறப்பு சப் இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை மர்ம நபர் திருடி சென்ற சம்பவம் கோவை போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×