என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Surya Worship"

    • மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம்.
    • நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம்.

    ரத சப்தமி அன்று காலையில், சுமங்கலிகள் ஏழு எருக்கம் இலைகளை (தலை மீது 3, வலது புஜத்தில் 2, இடது புஜத்தில் 2 ) அட்சதை மற்றும் மஞ்சள் தூள் வைத்துக் கொண்டு நீராடுவது சம்பிரதாயம். ஆண்கள் எருக்கம் இலைகளில் அட்சதை மட்டுமே வைத்து நீராட வேண்டும். நீராடிய பிறகு சூரியனுக்கு அர்க்கியம் தருவது விசேஷம். நீராடும்போது கீழ் கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தைச் சொல்வது நன்மை தரும்.

    ஸப்த ஸப்தப்ரியே தேவி ஸப்த வோதைக தீபிகே

    ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்

    யதா ஜன்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸி ஜன்மஸி

    தன்மே சோகஞ்ச மோஹஞ்ச மாகரீ ஹந்தஸப்தயீ

    ஏதத் ஜன்ம க்ருதம் பாபம் யத்ச ஜன்மாந்த ரார்ஜிதம்

    மனோவாக்காய ஜம் பாபம் ஜ்ஞாதாஜ்ஞாதேச புன

    சூரிய அர்க்கியமும்.. மந்திரமும்..

    சூரியனுக்கு அர்க்கியம் கொடுக்கும்போது, வலது கையில் அட்சதை, பூ, சந்தனம், குங்குமம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு, பாலும் தண்ணீரும் கலந்த நீரை ஒரு கிண்ணத்தில் இடது கையால் எடுத்து, வலது கையில் மூன்று முறை ஊற்ற வேண்டும். அப்படி ஊற்றும் நீரானது, ஒரு நல்ல தட்டில் (பித்தளை அல்லது செப்பு) விழுமாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறையும் கீழே சொல்லியுள்ள மந்திரத்தை சொல்லவும்.

    ஸப்த ஸப்திவஹ ப்ரீத ஸப்தலோக ப்ரதீபன்

    ஸப்தமீ ஸஹிதோதேவ க்ருஹாணார்க்யம் திவாகர

    திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம் இதமர்க்யம்

    இதி ஸப்த விதம் பாபம் ஸ்நாநான் மே ஸப்தஸப்திதே

    ஸப்தவ்யாதி ஸமாயுக்தம் ஹர மாகரி ஸப்தமி

    • அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.
    • மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.



    உங்களுக்கு சூரியதோஷம் இருந்தால், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனுமன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.


    ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45 மணிக்குள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள். ஆதித்ய ஹிருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

    வசதி இருப்பவர்கள், மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது, மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.


    வருடத்திற்கு ஒரு முறை அனுமன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள். சூரியனார் கோவிலுக்குப் போவதும் நல்லது.

    தினமும் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து அன்றாடப் பணிகளை செய்ய ஆரம்பியுங்கள். மாதத்தில் ஒருநாள் நவக்கிரக சூரியனை தரிசித்து வழிபடுங்கள்.

    மேற்கண்ட பரிகாரங்களுள் உங்களால் இயன்றதையெல்லாம் செய்யுங்கள். சூரியதோஷம் நிச்சயமாக உங்களை விட்டுப் போகும்.

    • பன்னிரு சூரியர்களையும் ‘ஆதித்தியர்’ என்பர்.
    • சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து ‘கிரகபதம்’ எனும் பேறு பெற்றார்.

    காசிப முனிவருக்கும் அவரது மனைவி அதிதி என்பவருக்கும் விசுவவான் முதலான பன்னிரண்டு சூரியர்கள் பிறந்தனர். அதிதி அன்னையின் புத்திரர்கள் ஆதலால் பன்னிரு சூரியர்களையும் 'ஆதித்தியர்' என்பர்.

    பிரம்மதேவன் ஒரு காலத்தில் இருள் மயமான அண்டத்தைப் பிளந்தார். அப்போது அவ் அண்டத்திலிருந்து 'ஓம்' என்றப் பேரொலி எழுந்தது. அவ்வொலியில் இருந்து ஒளி உருவமாக சூரியன் தோன்றினான். இவ்வாறே சூரிய பகவானின் முதல்தோற்றம் நிகழ்ந்தது என மன மார்க்கண்டேய புராணம் கூறுகின்றது.

    பன்னிரு சூரியர்களில் முதலாமவராகிய விசுவவான் என்ற சூரிய பகவான் துவஷ்டாவின் மகளான சஞ்ஞீகை (உஷா) என்பவரை மணந்துகொண்டார். சஞ்ஞீகையின் திருவயிற்றில் வைத்சுதமனு, யமன், அசுவினி தேவர்கள் ஆகியோர் பிறந்தனர்.


    சூரியனின் சூடு (வெப்பம்) தாங்க இயலாதவளாகிய சஞ்ஞீகை தன்னுடைய நிழலையே ஒரு பெண்ணாக உருவாக்கினாள். அவளைத் தனக்குப் பதிலாக சூரியனுக்குத் தெரியாமலே அவரிடம் இருக்கச் செய்து சஞ்ஞீகை தந்தை வீடு சென்றுவிட்டாள்.

    சஞ்ஞீகையின் நிழலாகத் தோன்றிய அப்பெண்ணிற்குச் சாயாதேவி (பிரத்யுஷா) என்ற பெயர் வழங்கலாயிற்று. சாயாதேவி தான், வேறொரு பெண் என்ற விபரத்தை அறிவிக்காமலே ஆதித்தியரிடம் வாழ்க்கைத் துணையாக வாழ்ந்து வந்தாள். சூரியனும் அவளைச் சஞ்ஞீகை என்றே நினைத்து நெடுநாட்கள் வாழ்ந்துவந்தான்.

    சாயாதேவிக்கு சாவர்ணியமனு, சனி என்ற மகன்களும் பத்திரை என்ற மகளும் பிறந்தனர்.

    ஒரு சமயம் சூரியன் தன் மகனான எமனால் சாயாதேவி தோன்றிய உண்மை வரலாற்றை அறிந்தார். உடனே உஷாதேவியின் தந்தையான துவஷ்டாவிடம் சென்று உஷாதேவி இருக்குமிடத்தை அறிந்து கொண்டு அங்கே விரைந்தார்.

    அடர்ந்த காட்டில் பெண் குதிரை உருவத்தில் உஷாதேவி தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். பின்னர் அவரிடம் பேசி அன்போடு அழைத்து வந்து அவள் விருப்பப்படி இருவரோடும் இன்பமுடன் இல்லறம் ஏற்றருளினார். இவ்விரு தேவிகளே சூரியனிடம் என்றும் பிரியாதிருந்து அருள் செய்கின்றனர்.

    சூரியனுக்கு மனைவியர் பலர் உண்டு எனப் புராணங்கள் கூறுகின்றன. சூரியனுக்கும் சருஷிணிக்கும் பிறந்தவர்கள் பிருகு, வால்மீகர் ஆவர். சூரியனுக்கும் ஊர்வசிக்கும் பிறந்தவர்கள் அகத்தியரும், வால்மீகியும் ஆவர்.

    சூரியனுக்கும் குந்திதேவிக்கும் பிறந்தவன் கர்ணன் என்று பாரதமும், சுக்ரீவன் சூரியக்குமாரனே என்று ராமாயணமும் கூறுகின்றன.

    சிவபெருமானை நோக்கி சூரியன் கடுந்தவம் செய்து 'கிரகபதம்' எனும் பேறு பெற்றார். மேலும் ஆயிரம் கிரகணங்களோடு ஒளி மண்டலத்தில் உலா வரும் உயர்வையும் சிவனருளால் பெற்றார். அதனால் சூரியன் தம் ஆயிரம் கிரகணங்களால் இருளை அழிக்கவும் ஒளியை உண்டாக்கவும் வெப்பத்தைத் தரவும் கூடிய வல்லமை பெற்றார்.

    1000 கிரகணங்களில் 400 கிரகணங்கள் மழை பொழிவதற்கும், 300 கிரகணங்கள் மழை வளம் உண்டாக்குவதற்கும் 300 கிரகணங்கள் பனி பொழிவதற்கும் பயன்படுகின்றன என்று புராணங்கள் எடுத்துரைக்கின்றன.

    சூரியன் மேஷம் முதல் மீனம் வரையிலான பன்னிரண்டு ராசிகளுக்கும் செல்வார். அவர் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்குச் செல்லும் சமயமே மாதப் பிறப்பு நிகழ்கிறது. சூரியன் சஞ்சரிக்கும் ராசியின் பெயரைக் கொண்டே அந்தந்த மாதங்களுக்குப் பெயர் வழங்கப்படுகின்றன.


    சித்திரை மாதப் பிறப்பைச் சித்திரை விசு என்றும் ஐப்பசி மாதப் பிறப்பை 'ஐப்பசி விசு' என்றும் கூறுவர். இவ்விரு மாதப் பிறப்புகளுக்கு முன் எட்டு நாழிகைகளும் பின் எட்டு நாழிகைகளும் புண்ணிய காலங்களாகும்.

    தட்சிணாயணம் தொடங்கும் ஆடி மாதப் பிறப்பின் முன் 16 நாழிகையும், உத்ராயணம் தொடங்கும் தை மாதப் பிறப்பின் பின் 16 நாழிகைகளும் புண்ணிய காலங்கள்.

    சூரியன் மகர ராசியில் (தை மாதம்) இருக்கும்போது ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, திருவோணம் நட்சத்திரம், வியதீபாத யோகம் ஆகிய நான்கும் கூடினால் அது அர்த்தோதய புண்ணிய காலமாகும்.

    சூரியன் மகரராசியில் இருக்கும்போது திங்கட்கிழமை, அமாவாசை, திருவோணம், வியதீபாதம் ஆகியவை கூடியவரின் மகோதய புண்ணிய காலமாகும்.

    இக்காலங்களில் புண்ணிய தீர்த்தங்களில் நீராடி சூரிய வணக்கம் செய்து இறைவழிபாடு, தியானம் முதலியன செய்தால் பல பிறவிகளில் செய்த வினை நீங்கும். பெரும் புண்ணியங்கள் சேரும் என்று ஆகமங்களும் புராணங்களும் கூறுகின்றன.

    ×