search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sulfuric Acid"

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை அகற்றும் பணி பிற்பகலில் முழுமையாக நிறைவுற்றது. இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் ஆலையில் இருந்து வெளியேறினார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்-காட் வளாகத்தில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலையினால் சுற்றுச்சூழல் மாசுப்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கடந்த மாதம் 22-ந் தேதி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தார்கள். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை குடோனில் இருந்து கடந்த 16-ந் தேதி மாலை ரசாயன கசிவு ஏற்பட்டதாக தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அவர் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையில் அதிகாரிகள் குழுவை அனுப்பி ரசாயன கசிவை உறுதி செய்தார். இதைத்தொடர்ந்து ஆலையில் இருந்து கசிவான 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 17-ந் தேதி கந்தக அமிலத்தை அகற்றும் பணி தொடங்கியது.

    டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு சேலம், கோவை பகுதியில் உள்ள தனியார் ஆலைகளுக்கு அனுப்பப்பட்டன. நேற்று மாலை வரை 40-க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் மூலமாக 900 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியே கொண்டு செல்லப்பட்டது. இன்று காலையில் டேங்கர் லாரிகளில் கந்தக அமிலத்தை நிரப்பி அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. காலையில் 5க்கும் மேற்பட்ட லாரிகள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை நிரப்பி சென்றன. இன்று பிற்பகலில் கந்தக அமிலம் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் குழுவினர் ஆலையில் இருந்து வெளியேறினார்கள். தொடந்து ஆலை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்கள் மற்றும் பொருட்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சுமார் 25 லாரிகள் மூலமாக 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். #Sterlite #Sulfuricacid
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு மின்சாரம், தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு சீல் வைக்கப்ப‌ட்டது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குடோனில் ரசாயன கசிவு ஏற்பட்டதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் சப்-கலெக்டர் பிரஷாந்த் தலைமையிலான குழு மூலமாக ரசாயன கசிவை உறுதி செய்தார். குடோனில் 1000 மெட்ரிக் டன் கந்தக அமிலம் கசிவாகி இருப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து ஆலை குடோனில் இருந்து கசிவான கந்தக அமிலத்தை அப்புறப்படுத்த நடவடிக்க மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கான பணிகள் கடந்த 18-ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடந்தன. பிரத்யேக பாதை மூலமாக டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டு கந்தக அமிலம் அகற்றப்பட்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் நிபுணர் குழு மூலம் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வரை 15 டேங்கர் லாரிகள் மூலம், சுமார் 350 டன் எடையுள்ள கந்தக அமிலம் அகற்றப்பட்டது. நேற்று மேலும் 5 டேங்கர் லாரிகள் மூலம் மேலும் 100 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டது.

    அகற்றப்பட்ட கந்தக அமிலத்தை கோவை, சேலம் மற்றும் தூத்துக்குடி பகுதியில் உள்ள உரம் தயாரிப்பு உள்ளிட்ட ஆலைகளுக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எனவே, அந்த ஆலைகளுக்கு கந்தக அமிலம் டேங்கர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன. இன்று காலையில் மேலும் 5 லாரிகள் ஆலைக்குள் சென்றன. அந்த லாரிகளில் கந்தக அமிலத்தை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இன்று மதியம் நிலவரப்படி சுமார் 25 லாரிகள் மூலமாக 500 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அமிலத்தை டேங்கர் லாரிகளில் நிரப்பி அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.



    இது தொடர்பாக, கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறுகையில், “ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து அகற்றப்படும் கந்தக அமிலம் உடனுக்குடன் வெளியில் அனுப்பப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் ஆலையில் உள்ள கந்தக அமிலத்தை முழுமையாக அகற்ற திட்டமிட்டுள்ளோம்” என்றார். #Sterlite #Sulfuricacid

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் அகற்றும் பணி இன்று 3-வது நாளாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந் தேதி நடந்த பேரணியின் போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பு மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு கடந்த 28-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது.

    துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வழக்குகளை சி.பி.சி.ஐ.டி, போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் ஒருநபர் ஆணைய விசாரணையும் நடைபெற்று வருகிறது. தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையமும் இதுபற்றி விசாரணை மேற்கொண்டது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலை குடோனில் இருந்து ரசாயன கசிவு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்த‌து. இதையடுத்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவின் பேரில், உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தனர். ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 1,000 மெட்ரிக் டன் கந்தக அமிலத்தை டேங்கர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி கந்தக அமிலத்தை ஆலையில் இருந்து வெளியேற்றும் பணி நேற்று முன்தினம் காலையில் தொடங்கியது.

    நேற்று அந்த பணி 2-வது நாளாக நடைபெற்றது. ஆலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்ததால் ஜெனரேட்டர் மூலம் மின்வசதி ஏற்படுத்தப்பட்டு இந்த பணி நடைபெற்றது. மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டது. ஒரு லாரியில் தலா 25 டன் கந்தக அமிலம் நிரப்பப்பட்டன. முதல் கட்டமாக 4 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு கோவை மற்றும் சேலத்தில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    கந்தக அமிலம் அகற்றும் பணி இன்று 3 -வது நாளாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இன்று கூடுதலாக டேங்கர் லாரிகள் வரவழைக்கப்பட்டு உள்ளன. அந்த லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு வெளியேற்றப்பட்டு வருகிறது. கோவை, சேலம் மட்டுமின்றி தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

    எந்த தொழிற்சாலைகள் விருப்பப்பட்டு கேட்கிறார்களோ அந்த தொழிற்சாலைக்கு கந்தக அமிலம் டேங்கர் லாரிகளில் அனுப்பப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    கந்தக அமிலம் சேமிப்பு தொட்டியில் ஏற்பட்ட கசிவு ஏற்கனவே அடைக்கப்பட்டுவிட்டது என்றும், இப்பணிக்குப் பிறகு மற்ற ரசாயனங்கள் குறித்து ஆய்வு செய்து, அவற்றை என்ன செய்வது என்பது தொடர்பாக முடிவு செய்யப்படும் என்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்துள்ளார். அதன்படி கந்தக அமிலம் முழுமையாக அகற்றப்பட்ட பின்னரே மற்ற ரசாயனங்கள் குறித்த ஆய்வு நடைபெறும் என தெரிகிறது. அதற்கான பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இதுவரை 200 டன் கந்தக அமிலம் அகற்றப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். #Sterlite #Sulfuricacid
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் 22-ந்தேதி நடந்த பேரணியின் போது போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு கடந்த 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடி ‘சீல்’ வைத்தது.

    ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக புகார்கள் வந்ததால் மாவட்ட உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தனர். அப்போது ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டு இருந்த கன்டெய்னரில் சிறிய கசிவு ஏற்பட்டது தெரியவந்தது.

    இதையடுத்து ஆலையில் சேமித்து வைக்கப்பட்டு இருந்த 1,000 டன் கந்தக அமிலத்தை அகற்ற மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதன்படி கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணி நேற்று முன்தினம் காலையில் தொடங்கியது. மோட்டார் மூலம் பம்பிங் செய்யப்பட்டு, டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டது.

    நேற்று முன்தினம் இரவில் 5 டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பி வெளியே கொண்டு வரப்பட்டது. அந்த பகுதியில் உள்ள எடை மேடையில் டேங்கர் லாரிகளில் எவ்வளவு அளவு கந்தக அமிலம் ஏற்றப்பட்டு உள்ளது என்று எடை பார்க்கப்பட்டது. ஒரு லாரிக்கு சராசரியாக 25 டன் கந்தக அமிலம் ஏற்றப்பட்டது.

    பின்னர் டேங்கர் லாரிகளில் முழுவதும் கந்தக அமிலம் நிரப்பப்பட்டு, வெளியூர்களில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பணி விடிய, விடிய நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்தது.

    இதுகுறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:-



    ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து இதுவரை 8 டேங்கர் லாரிகள் மூலம் 200 டன் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டுள்ளது. இதற்கான பணி பாதுகாப்பான முறையில் நடந்து வருகிறது.

    இந்த அமிலம் கோவை, சேலம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன. (அதாவது கந்தக அமிலத்தை மூலப்பொருளாக பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது).

    இன்னும் 2 நாட்களில் ஆலையில் இருந்து முற்றிலும் கந்தக அமிலம் அகற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Sterlite #Sulfuricacid

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழு முன்னிலையில் இன்று 2-வது நாளாக நடந்தது.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த மாதம் (மே) 22-ந்தேதி பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக சென்றனர். அப்போது போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டது.

    முதலில் ஸ்டெர்லைட் ஆலைக்கு வழங்கப்பட்டிருந்த மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடி சீல் வைத்தது.

    இந்தநிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதையடுத்து அங்கு ஆய்வு நடத்த மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டார். அதன் பேரில் உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் (17-ந்தேதி) ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.

    அதில் ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் சேமித்து வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழு கலெக்டரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை டேங்கர் லாரிகள் மூலம் வெளியே கொண்டு செல்ல முடிவெடுக்கப்பட்டது.

    அதன்படி கந்தக அமிலத்தை ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியேற்றும் பணி நேற்று காலை தொடங்கியது. ஸ்டெர்லைட் ஆலையின் பிரதான வாயில் சீல் வைக்கப்பட்டிருப்பதால், ஆலையின் இடது புறம் உள்ள வாசல் வழியாக உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் உள்ளே சென்றனர்.

    அந்த வாசல் வழியாகவே கந்தக அமிலத்தை எடுத்து வருவதற்காக டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டன. ஆலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதால் ஜெனரேட்டர் மூலம் மின்வசதி செய்யப்பட்டது. பின்பு மோட்டார் மூலம் பம்பிங் செய்து டேங்கர் லாரிகளில் கந்தக அமிலம் நிரப்பப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலையில் மொத்தம் ஆயிரம் மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது. அமிலத்தை அகற்றும் பணி மிகவும் பாதுகாப்பான முறையில் நடத்தப்படுகிறது. அவற்றை அகற்றும் பணி இரவிலும் நீடித்தது. இன்று காலை வரை விடிய விடிய நடந்தது.

    கந்தக அமிலம் அகற்றும் பணி குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறும் போது, ‘ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலத்தை அகற்றும் பணி அரசு அதிகாரிகள் தலைமையில் நடந்து வருகிறது. அமிலத்தை வெளியேற்ற 5 டேங்கர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன. கந்தக அமிலம் ஏற்றிய பிறகு டேங்கர் லாரிகளை வெளியே கொண்டு செல்லும் பணி நடக்கும்.

    ஆலையில் சுமார் ஆயிரம் மெட்ரிக் டன் கந்தக அமிலம் உள்ளது. அவை ஓரிரு நாளில் ஆலையில் இருந்து வெளியே கொண்டு செல்லப்படும். ஸ்டெர்லைட் ஆலை இந்த கந்தக அமிலத்தை ஏற்கனவே வெளியே உள்ள ஒரு சில நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வந்தது. அந்த நிறுவனங்களுக்கே அமிலத்தை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் அகற்றும் பணி உதவி கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான அதிகாரிகள் குழு முன்னிலையில் இன்று 2-வது நாளாக நடந்தது.

    கந்தக அமிலத்தை கொண்டு வருவதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்குள் நேற்று சென்ற 5 டேங்கர் லாரிகள் இன்று காலை வெகுநேரம் வரை வெளியே வரவில்லை. அவற்றில் கந்தக அமிலம் நிரப்பப்பட்ட 4 லாரிகள் இன்று காலை 8.45 மணியளவில் ஆலையை விட்டு வெளியே வந்தது.

    ஸ்டெர்லைட் ஆலையில் எடை பார்க்கும் வசதி அங்கு இருந்தபோதிலும் அங்கு மின்சாரம் துண்டிக் கப்பட்டிருப்பதால் அந்த எந்திரத்தை இயக்க முடியவில்லை. இதனால் எவ்வளவு எடை ஆசிட் நிரப்பப்பட்டுள்ளது என்பதை எடை போடுவதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகே உள்ள கனரக வாகனங்கள் எடைபோடும் நிறுவனத்திற்கு லாரிகள் கொண்டு செல்லப்பட்டன.

    அங்கு எடை பார்க்கப்பட்டதில் 4 லாரிகளிலும் 10 டன் அளவுக்கே ஆசிட் நிரப்பப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால் அவற்றில் 21 டன் வரை ஆசிட் நிரப்பலாம். இதையடுத்து அந்த 4 லாரிகளும் மீண்டும் ஸ்டெர்லைட் ஆலைக்குள் கொண்டு செல்லப்பட்டன.

    அவற்றில் 21 டன் அளவுக்கு ஆசிட் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அனைத்து லாரிகளிலும் 21 டன் ஆசிட் நிரப்பிய பிறகு அவற்றை வெளியே கொண்டு செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்னும் 2 நாட்களில் கந்தக அமிலம் அகற்றப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் கூறினார். #sterlite #Sulfuricacid
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கோனார்பாளையம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு கட்டிடம் திறப்பு விழா நடந்தது.

    இதில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் கலந்து கொண்டு பயிற்சி வகுப்பு கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    அதன்பிறகு அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தமிழகத்தில் கல்வித்துறை சார்பில் புரட்சிகரமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் சீருடைகள் மாற்றப்பட்டு தனியார் பள்ளிகளுக்கு இணையான வண்ண வண்ண சீருடை அணிந்து மாணவர்கள் செல்கிறார்கள்.

    ரூ. 27 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் கந்தக அமிலம் வாயு கசிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக அந்த மாவட்ட கலெக்டர் தலைமையில் ஒரு குழு அமைத்து கந்தக அமிலம் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    இன்னும் 2 நாட்களில் அவை முற்றிலும் அகற்றப்பட்டுவிடும். தூத்துக்குடி மக்கள் கவலைப்பட வேண்டாம். அச்சப்படவும் வேண்டாம்.

    சேலம்-சென்னை, சேலம்-கோவை இடையே அமைக்கப்படும் 8 வழி பசுமை சாலை மக்களுக்கு மிகவும் அவசியமானதாகும். இந்த பசுமை சாலை அமைந்தால் சேலத்தில் இருந்து 4 மணி நேரத்தில் சென்னைக்கு சென்றுவிடலாம்.

    ஆனால் இந்த திட்டத்தை நிறைவேற்றக்கூடாது என்று கங்கணத்துடன் எதிர்க்கட்சியினர் மக்களை தூண்டி விடுகிறார்கள்.

    இந்த திட்டத்தால் ஏற்படும் இழப்புகளை அரசு ஏற்கும். சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய நிதி வழங்கவும் தமிழக அரசு தயாராக உள்ளது.

    இவ்வாறு அமைச்சர் கே.சி. கருப்பணன் கூறினார். #sterlite #Sulfuricacid

    தூத்துக்குடிஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கந்தக அமில கிடங்கில் ஏற்பட்ட கசிவை அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. #SterlitePlant #Sterlite
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டு வந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறி ஆலையை சுற்றியுள்ள கிராமமக்கள் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஆலையை விரிவாக்கம் செய்ய நிர்வாகம் திட்டமிட்டதால் போராட்டம் தீவிரமானது. கடந்த 22-ந்தேதி பொதுமக்கள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடகோரி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற போது வன்முறை வெடித்தது.

    இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து 28-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு ஆணை பிறப்பித்தது.

    இதையடுத்து ஆலை சீல் வைக்கப்பட்டது. ஆலை முன்பாக போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டார்கள். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஒரு குடோனில் இருந்து ரசாயன கசிவு இருப்பதாக கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து கலெக்டர் உத்தரவின்பேரில் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் மாசுகட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் லிவிங்ஸ்டன், மாவட்ட தீயணைப்பு அதிகாரி குமரேசன், தாசில்தார் சிவகாமசுந்தரி, டி.எஸ்.பி. முத்தமிழ், தொழிற்சாலை ஆய்வாளர்கள் ராஜ்குமார், சரவணன் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

    இந்த குழுவினர் நேற்று மாலை ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு செய்ய சென்றனர். அப்போது போலீசார் மற்றும் தீயணைப்பு வாகனம், கலவர தடுப்பு வாகனமும் கொண்டு செல்லப்பட்டது.

    அதிகாரிகள் குழு ஆலையின் பக்கவாட்டில் உள்ள சிறிய கேட் வழியாக ஆலைக்குள் சென்றார்கள். ஆலையின் குடோன் பகுதிக்கு சென்ற அவர்கள் அங்கு ரசாயன மூலப்பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தை பார்த்தார்கள். சுமார் 2 மணி நேரம் இந்த ஆய்வு நடைபெற்றது.

    அப்போது ஆலையின் குடோனில் வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் கசிவானது  கண்டுபிடிக்கப்ப‌ட்டது. இந்த விவரத்தை அதிகாரிகள் குழுவினர் கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் தெரிவித்தார்கள்.  இதைத்தொடர்ந்து கசிவை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பதால் அங்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது. இதனால் இரவோடு இரவாக ரசாயன கசிவை சரி செய்வதில் சிக்கல்  ஏற்பட்டது. இதைதொடர்ந்து இன்று காலை கசிவை சரி செய்யும் பணியை தொடங்கினர்.

    இதற்காக ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். மேலும் என்ஜினீயர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகளும், தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு மீட்பு படை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்திருந்தனர்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு அதிகாரிகள் குழு வந்தபோது எடுத்த படம்.

    கந்தக அமிலத்தை அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றி வெளியே கொண்டு வருவதற்காக பிரத்யேக பாதை அமைக்கப்பட்டது. இந்த பாதை வழியாக டேங்கர் லாரிகள் கொண்டு செல்லப்பட்டன. அந்த லாரிகள் மூலம் ஆலை குடோனில் இருந்து கந்தக அமிலம் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது.

    இதனிடையே ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயன கசிவு ஏற்பட்டது குறித்த தகவல் அக்கம் பக்கத்து கிராமங்களில் பரவியது. இதனால் தூத்துக்குடி நகர் முழுவதும் பரபரப்பும், பதட்டமும் உண்டானது. கிராமமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அதிர்ச்சியுடன் சாலையில் திரண்டார்கள். விடிய விடிய பொதுமக்கள் பீதியுடன் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    ரசாயன கசிவால் ஆபத்து இல்லை என்று கலெக்டர் சதீப் நந்தூரி தெரிவித்தார். எனினும் பொதுமக்கள் மத்தியில் இன்னும் பீதி அடங்கவில்லை.

    இதுபற்றி அப்பகுதியினர் கூறுகையில், ‘ஸ்டெர்லைட் ஆலையில் தாமிரத்தை சுத்திகரிக்க பல்வேறு ரசாயனங்களை பயன்படுத்துகிறார்கள். இவை மிகவும் ஆபத்தானவை. இந்த அமிலங்களை ஆலை நிர்வாகம் இன்னமும் ஆலையின் குடோனிலேயே வைத்திருக்கிறது. இது உடனடியாக அப்புறப்படுத்தப்படவேண்டும்.

    ஆலை மூடபப்பட்டதால் ரசாயனங்களை அரசே முன்நின்று பாதுகப்பாக அப்புறப்படுத்தவேண்டும்’ என்றனர். #SterlitePlant  #Sterlite
    ×