search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "suicide teenager"

    சுசீந்திரம் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    என்.ஜிஓ. காலனி:

    சுசீந்திரம் புத்தளம் உசர விளை பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன், தொழிலாளி. இவரது மனைவி நாகமணி முத்துசங்கு (வயது 39). இவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று வீட்டின் அருகே உள்ள ஒரு கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவிற்கு கண்ணன், தனது மனைவியை வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர் திருவிழாவிற்கு செல்ல மறுத்துள்ளார்.

    இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. கண்ணன் மட்டும் திருவிழாவிற்கு சென்றிருந்தார். பின்னர் இரவு கோவிலில் இருந்து வீடு திரும்பியபோது வீட்டில் இருந்த மனைவி மாயமாகி இருந்தது தெரியவந்தது. மனைவியை தேடிப்பார்த்தார்.

    அப்போது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மனைவி இறந்து விட்டதாக கூறியதை கேட்டதும், கண்ணன் கதறி அழுதார்.

    இது குறித்து சுசீந்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பிரசாத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை கணபதி அருகே உள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் ராஜன். இவரது மகள் தீபா (வயது 20). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். தீபா கடந்த 1 வருடங்களாக வாலிபர் ஒருவரை காதலித்து வந்தார். இந்த காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் காதலை கைவிடுமாறு வலியுறுத்தினர். இதனால் கடந்த சில நாட்களாக தீபா மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட தீபாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    ×