search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suganya"

    • வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!
    • “நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே” என்கின்றார்கள் சித்தர்கள்.

    அழகில் சிறந்த சுகன்யா என்பவள், தன்னைவிட மிக அதிக வயதான ஸ்யவன மகரிஷியைத் திருமணம் செய்து கொண்டாள்.

    அவள் திருமணம் செய்து கொண்டதும் தன் கணவனை, நாம் இருவரும் வாழ்வதோடு மட்டுமல்லாமல் இவ்வுலகமும் வாழ வழி ஒன்று சொல்ல வேண்டும் என்றாள்.

    உடனே ஸ்யவன மகரிஷி "அம்மா, அதற்கு வழி நவராத்திரி பூஜை ஒன்று தான்" என்றார். அவர் மேலும் கூறியதாவது:

    "நவராத்திரி பூஜை பெண்களுக்கு மட்டுமே உரித்தானது.

    ஆண்களுக்கு அதில் எந்தவிதமான பங்கும் கிடையாது" என்று நினைப்பது தவறு.

    ஏனென்றால், "நவராத்திரி பூஜை எல்லாம் சிவராத்திரி பூஜையே" என்கின்றார்கள் சித்தர்கள்.

    கோணக்காதர், கரபாத்திரர். சித்தர் சுடர், ஜடாமினி கோரக்கர், கொல்லிமலை முருகன், தான்பிஸண்டர்,

    கொங்கண சித்தர், கள்ளிப்பால் சித்தர், பாம்பாட்டி சித்தர் அனைவருமே

    "நவாராத்திரியானது சிவ பூஜை செய்வதற்கே!" என்கின்றனர்.

    ஆகவே, நவராத்திரி எல்லாமே சிவராத்திரி தான்.

    நவராத்திரியில் வரும் அனைத்துப் பகல்களும், இரவுகளும் சிவனையே சாரும்.

    வருடத்தில் ஒருநாள் மட்டும் சிவராத்திரி என்று நினைக்கக்கூடாது. அனைத்தும் சிவமயமே!

    அனைத்தும் சிவனின் இரவுகளே!

    அனைத்து துர்க்கைகளும் பகலில் ஈசனை வணங்குகின்றனர்.

    பகலில் ஈசனை வணங்கியதால் கிட்டும் பலனைத்தான் இரவில் தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அம்பிகைகளின் அம்சங்கள் அளிக்கின்றனர்.

    எனரே தான், "ஈசனை வணங்குதல் மிக முக்கியம்" என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர்.

    பகலில் நாம் 1008 சிவ நாமாவளிகளை ஜெபித்து, சிவ பூஜை செய்தால் தான், இரவில் துர்க்கை தரும் பலனைப் பெற முடியும்.

    இவ்வாறு ஸ்யவந மகரிஷியானவர் சுகன்யா தேவிக்கு நவராத்திரி பூஜைகளின் சிறப்பையும்,

    அவற்றை முறையாகக் கொண்டாடுகின்ற விதத்தையும் எடுத்துரைத்தார்.

    சுகன்யா தேவியும் தன் கணவர் அருளியபடியே நவராத்திரி பூஜைகளைக் கடைப்பிடித்து, நல்ல நிலையை அடைந்தாள்.

    சேரன் இயக்கத்தில் உமாபதி ராமையா - காவ்யா சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் `திருமணம்' படத்தின் முன்னோட்டம். #Thirumanam #Cheran #Umapathi
    பிரெனிஸ் இன்டர்நேஷனல் சார்பில் பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `திருமணம்'.

    இந்த படத்தை இயக்கி நடித்திருக்கிறார் சேரன். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர். தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ராஜேஷ் யாதவ், இசை - சித்தார்த் விபின், படத்தொகுப்பு - பொன்னுவேல் தாமோதரன், பாடல்கள் - சேரன், லலித் ஆனந், யுகபாரதி, நடனம் - சஜ்னா நஜம், ஆடை வடிவமைப்பு - கவிதா சச்சி, தயாரிப்பு - பிரேம்நாத் சிதம்பரம், வெள்ளை சேது, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - சேரன்.



    சுமார் மூன்று வருடங்களுக்கு பிறகு படம் இயக்கியிருக்கும் சேரன் படம் பற்றி பேசும் போது,

    திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும் என்று நம்புகிறேன். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. இவ்வாறு கூறினார்.

    படம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. #Thirumanam #Cheran #Umapathi #KavyaSuresh #Sukanya #ThirumanamFrom1stMarch

    திருமணம் டிரைலர்:

    பாரதி கண்ணம்மா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சேரன் அடுத்ததாக திருமண பந்தத்தை மையப்படுத்தி புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். #Cheran #Thirumanam #Umapathi
    பாரதி கண்ணம்மா, பொற்காலம், தேசிய கீதம், வெற்றிக்கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, மாயக்கண்ணாடி, பொக்கி‌ஷம் உள்ளிட்ட படங்களை இயக்கிவர் சேரன். சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப், ராமன் தேடிய சீதை, மாயக்கண்ணாடி போன்ற சில படங்களில் சேரன் கதாநாயகனாகவும் நடித்து இருந்தார்.

    கடைசியாக ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கியிருந்தார். மூன்று வருடங்களுக்கு பிறகு தற்போது ‘திருமணம்’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இதில் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இன்னொரு நாயகனாகவும், நாயகியாக காவ்யா சுரேசும் நடித்துள்ளனர். 

    தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், மனோபாலா, பால சரவணன், சுகன்யா, சீமா ஜி. நாயர், அனுபமா உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்தை பிரேம்நாத் சிதம்பரம் தயாரிக்கிறார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்கிறார். சித்தார்த் விபின் இசையமைக்கிறார்.



    இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் பெயரை வெளியிடும் நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. இதில் நடிகர் விஜய் சேதுபதி படத்தின் போஸ்டரை வெளியிட்டார்.

    விழாவில் சேரன் பேசியதாவது:–

    ‘‘திருமணம் படத்தை 4 வருடங்களுக்கு பிறகு இயக்கி இருக்கிறேன். இந்த இடைவெளியில் நிறைய அனுபவங்களை பெற்று விட்டேன். இந்த அனுபவங்கள் என்னை 10 வருடங்களுக்கு வழிநடத்தும். ஒரு நடுத்தர குடும்பத்தில் பெண் பார்க்கும் படலத்தில் தொடங்கி திருமணம் நடப்பது வரையிலான சம்பவங்களே படத்தின் கதை. விஜய் சேதுபதி எனது படத்தில் நடிப்பதாக கூறியிருக்கிறார். அவர் எப்போது வருகிறாரோ அப்போது அவரை வைத்து படம் இயக்குவேன்.’’

    இவவாறு சேரன் கூறினார். #Cheran #Thirumanam #Umapathi

    ×