என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "students escaped"
- பெற்றோர் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- 5 தனிப் படை அமைத்து, மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
காரமடை:
காரமடை அருகே கன்னார்பாளையத்தில் வித்யா விகாஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
சம்பவத்தன்று 9-ம் வகுப்பு மாணவர்கள் 2 பேர், 8-ம் வகுப்பு மாணவர் ஒருவர் என 3 பேரும், பள்ளி விடுதியின் சுவர் ஏறிக்குதித்து வெளியேறியுள்ளனர். இதனையடுத்து பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை தேடிப் பார்த்தனர். ஆனால் கிடைக்க வில்லை. இது குறித்து காரமடை போலீசில், பள்ளி நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 5 தனிப் படை அமைத்து, மாணவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
போலீசார் பள்ளியின்கண்காணிப்பு கேமரா பதிவுகளை கேட்டனர். அப்போது கேமரா செயல்படாமல் இருந்தது தெரியவந்தது.இதனை தொடர்ந்து, கன்னார்ப்பாளையம் ரோட்டிலும், காரமடை மெயின் ரோட்டிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது மூன்று மாணவர்கள், கோவை சென்ற தனியார் பஸ்ஸில் ஏறிச்சென்றது பதிவாகி இருந்தது. இந்நிலையில் மாணவர்கள் 3 பேரும் அவரவர் வீடுகளுக்குபத்திரமாக வந்ததாக பெற்றோர் பள்ளிக்கு தகவல் அளித்தனர். விடுதியில் தங்க பிடிக்காமல் மாணவர்கள் வெளியேறி யதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச்சம்பவம் காரமடையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பள்ளி,விடுதிகளில் கேமராக்கள் முழுமையான கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள சூழலில், பல பள்ளிகள் பெயரளவில் கேமராக்களை வைத்துள்ளனர். இது பெற்றோர் மத்தியில் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாளை நகரின் மையப் பகுதியில் ரோஸ்மேரி மெட்ரிகுலேசேன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி அருகருகே 3 கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது. அவற்றில் ஒரு கட்டிடத்தின் ஒரு பகுதியில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை உள்ள மாணவ - மாணவிகளுக்கும், மற்றொரு பிரிவில் 7-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவ - மாணவிகளுக்கும் வகுப்பறைகள் உள்ளன.
இதில் 1 முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவிகளின் கட்டிடத்தில் சில வகுப்பறைகளில் பழைய புத்தகம், ரிக்கார்டுகள், பழைய பேப்பர் வைத்து குடோனாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதியம் மின்கசிவு காரணமாக அந்த குடோனில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ கொளுந்து விட்டு எரிந்து கட்டிடத்தின் ஜன்னல் வழியாக வெளியே பரவியது. இதையடுத்து பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஆசிரியர்கள் உடனடியாக துரிதமாக செயல்பட்டு குடோனின் அருகில் உள்ள 5 மற்றும் 6-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளை உடனடியாக மீட்டு அழைத்து சென்றனர். பின்னர் முதல் தளத்தில் உள்ள 3 மற்றும் 4-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளையும், இதைத்தொடர்ந்து தரைத் தளத்தில் உள்ள 1 மற்றும் 2-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளையும் பத்திரமாக மீட்டு வெளியே அழைத்து சென்றனர். மேலும் மாணவர்களின் பேக் உள்ளிட்ட பொருட்களையும் பள்ளி ஊழியர்கள் மீட்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல்அறிந்த மாவட்ட கலெக்டர் ஷில்பா உடனடியாக அந்த பள்ளிக்கு விரைந்து சென்று தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்