search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "State student councils"

    • மாணவர்கள் மறைமுக தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.
    • ரேவதி மருத்துவமனையின் தலைவர் ஈஸ்வரமூர்த்தி மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    திருப்பூர்:

    திருப்பூர் காந்தி நகரில் உள்ள ஏ.வி.பி. டிரஸ்ட் பப்ளிக் சீனியர் செகண்டரி பள்ளியில் 2022-2023-ம் ஆண்டுக்கான மாணவர் மன்ற தொடக்க விழா நடந்தது. முன்னதாக மாணவர் மன்றத்திற்கான புதிய நிர்வாகிகளை 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்கள் மறைமுக தேர்தல் மூலம் வாக்களித்து தேர்வு செய்தனர்.

    அதன்படி மாணவர் மன்ற தலைவர்களாக ஆகாஸ், கீர்த்தனா, துணைத்தலைவர்களாக முகமதுருசைல், ரிதுமிகா ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர். மேலும் பல்வேறு அணியின் செயலர்கள், துணை செயலர்கள், இணை செயலர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

    பள்ளியின் கலையரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு ஏ.வி. பி. கல்விக்குழுமங்களின் பொருளாளர் லதா கார்த்திகே யன் முன்னிலை வகித்தார். ஏ.வி.பி. கல்விக்குழுமங்களின் தாளாளர் கார்த்திகேயன் அருள்ஜோதி தலைமை தாங்கி பேசினார். பள்ளியின் முதல்வர் ஜி.பிரமோதினி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக திருப்பூர் இந்திய மருத்துவ கழகத்தின் தலைவரும், ரேவதி மருத்துவமனையின் தலைவருமான ஈஸ்வரமூர்த்தி மாணவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முடிவில் பள்ளியின் பாரதி மன்ற இணைசெயலர் மாணவிரிதன்யா நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் வி. மோகனா, கலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் எஸ். நித்யா ஆகியோருடன் இணைந்து முன்னாள் மாணவர் மன்றத்தினர் செய்திருந்தனர்.

    அசாம் சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். #PMModi #GoBackModi
    கவுகாத்தி:

    அசாம் மாநிலத்துக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, அந்த மாநில மாணவர் சங்கத்தினர் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக இப்போராட்டம் நடைபெற்றது. கவுகாத்தி விமான நிலையத்திலிருந்து, ராஜ்பவன் நோக்கி பிரதமரின் வாகன அணிவகுப்பு சென்றபோது, கவுகாத்தி பல்கலைக்கழக வாயில் பகுதியில் திரண்ட மாணவர் சங்கத்தினர், அவருக்கு கருப்பு கொடி காட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல், எம்.ஜி. சாலை பகுதியிலும் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டி மாணவர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது, பிரதமர் மோடி திரும்பிச் செல்ல வேண்டும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். இதனால், அந்த பகுதிகளில் சிறிது நேரத்துக்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், 2-வது நாளாக இன்று வடகிழக்கு மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என அங்குள்ள அமைப்புகள் கூறியுள்ளன. பிரதமர் மோடி, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, அசாம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இன்று பொதுக்கூட்டங்கள் மற்றும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.



    பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறியுள்ள இந்துக்கள், சீக்கியர்கள், பாரசீகர்கள், பௌத்தர்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு, குடியுரிமை சட்ட திருத்த  மசோதாவின் மூலம் இந்தியக் குடியுரிமை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு 12 ஆண்டுகள் இந்தியாவில் தங்கியிருந்தவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்று இருந்தது இப்போது 6 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது. அவர்கள் எவ்வித ஆவணங்களும் இல்லாமல் இருந்தாலும் குடியுரிமை வழங்கப்படும். அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டது. அதேசமயம், மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளது. விரைவில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. #PMModi #GoBackModi
    ×