search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "starts today"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா இன்று தொடங்கியது.
    • தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி விழா 9 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடுகள் நடைபெறும். கோவில் வளாகத்தில் சிறப்பு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று அம்மனுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்யப்படுகிறது.

    விழாவை முன்னிட்டு காலை திருமுறை இசை நிகழ்ச்சியும், பரதநாட்டி யமும் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. 5.30 மணிக்கும், 6.30 மணிக்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு நவராத்திரியின் மகிமை என்ற ஆன்மீக சொற்பொழிவு நடக்கிறது. 8.30 மணிக்கு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடக்கி றது.

    நாளை (27-ந்தேதி) அம்மனுக்கு கோலாட்ட அலங்காரமும், 28-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரமும், 29-ந்தேதி தட்சிணாமூர்த்தி அலங்காரமும், 30-ந்தேதி ஊஞ்சல் அலங்காரமும், அக்டோபர் 1-ந்தேதி அர்த்த நாரீஸ்வரர் அலங்காரமும், 2-ந்தேதி தண்ணீர்பந்தல் வைத்தல் அலங்காரமும்,3-ந்தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந்தேதி சிவபூஜை செய்யும் அலங்காரமும், 5-ந்தேதி விஜயதசமி சடையலம்புதல் அலங்காரமும் செய்யப்படுகிறது.

    விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை சிறப்பு வழிபாடுகளும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை துணை ஆணையர் அரு ணாச்சலம், உதவி ஆணையர் யக்ஞநாராயணன் தக்கார் கருமுத்து கண்ணன் ஆகி யோர் செய்துள்ளனர்.

    இதேபோல் இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடக்கிறது. மேலும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    மதுரையில் வீடுகளிலும் பெண்கள் கொலு அமைத்து சிறப்பு வழிபாடுகள் செய்து வருகின்றனர்.

    சென்னை ஸ்மா‌ஷர்ஸ் உள்ளிட்ட 9 அணிகள் பங்கேற்கும் பேட்மிண்டன் பிரிமீயர் லீக் மும்பையில் இன்று தொடங்குகிறது. #PremierBadmintonLeague
    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் பாணியில் 2013-ம் ஆண்டு இந்தியன் பேட்மிண்டன் லீக் போட்டி தொடங்கப்பட்டது.

    2014, 2015 ஆகிய 2 ஆண்டுகள் போட்டி நடக்கவில்லை. அதன்பின் 2016-ம் ஆண்டு பிரிமீயர் பேட் மிண்டன் லீக் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு நடந்தது.

    இந்நிலையில், 4-வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டி இன்று தொடங்குகிறது. ஜனவரி 13-ம் தேதி வரை 23 நாட்கள் நடக்கிறது.

    சென்னை ஸ்மா‌ஷர்ஸ், ஐதராபாத் ஹண்டர்ஸ், புனே 7 ஏசஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், டெல்லி டே‌ஷர்ஸ், பெங்களூரு ராப்டர்ஸ், அவாத் வாரியர்ஸ், ஆமதாபாத் ஸ்மா‌ஷர்ஸ் ஆகிய 9 அணிகள் பங்கேற்கின்றன.

    ஒவ்வொரு அணிக்கும் தலா 6 ஆட்டங்கள் இருக்கும். ஒவ்வொரு ஆட்டத்திலும் ஆண்கள், பெண்கள் ஒற்றையர், ஆண்கள், பெண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய பிரிவுகளில் போட்டி நடக்கும்.

    லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். 27 ஆட்டம் கொண்ட லீக் போட்டிகள் ஜனவரி 10-ந்தேதி வரை நடக்கிறது.



    முதல் அரை இறுதி ஜனவரி 11-ந்தேதி, 2-வது அரை இறுதி 12-ந்தேதி நடக்கிறது. இறுதிப் போட்டி ஜனவரி 13-ந்தேதி நடக்கிறது.

    இந்தியாவின் பி.வி.சிந்து, சாய்னா நேவால், சமீர் வர்மா, காஷ்யப், ஸ்ரீகாந்த், சாய் பிரஸீத், அஸ்வின் மற்றும் ஸ்பெயினின் கரோ லினா மரின் போன்ற முன்னணி வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகிறார்கள்.

    மும்பை, ஐதராபாத், புனே, அகமதாபாத், பெங்களூர் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடக்கிறது.

    மும்பையில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பி.வி.சிந்து உள்ள ஐதராபாத் - கரோலினா மரின் உள்ள புனே அணிகள் மோதுகின்றன.

    சென்னை அணி தனது தொடக்க ஆட்டத்தில் 25-ம் தேதி ஐதராபாத்துடன் மோதுகிறது. ஐதராபாத் (2013), டெல்லி (2016), சென்னை (2017) ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #PremierBadmintonLeague
    ×