என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sridevi Karumariamman"

    • ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை ெஜய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு வடிவேல் ெதருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அன்னை ஸ்ரீதேவி கருமாரி–யம்மன் கோவில் டிரஸ்ட் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவிலில் ஆடி மாத உற்சவ விழா கடந்த மாதம் 21-ந்தேதி கொடி–யேற்றத்துடன் தொடங்கியது. அன்று சக்தி பீடங்களுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து 108 சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விழா நாட் களில் ஸ்ரீதேவி கருமாரியம் மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் போடும் நிகழ்ச்சி, வாராஹி அம்மனுக்கு பஞ்சமி பூஜை, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டுதல், வளைகாப்பு திருவிழா, குழந்தையில்லா பெண்க–ளுக்கு மடி நிரப்பும் வைப–வம், அம்மன் மடி கட்டிய பச்சை பயிறு வழங்குதல் நடைபெற்றது.

    இன்று (3-ந்தேதி) காலை பதிெனட்டாம்படி கருப்ப–சாமிக்கு சந்தனகுடம் அபி–ஷேகம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஸ்ரீதேவி கருமாரி–யம்மனுக்கு கண்திறக்கும் வைபவம் நடக்கிறது. நாளை (4-ந்தேதி) ஏழு கன்னி குழந்தைகளுக்கு கன்னி பூஜை, வைகை ஆற்றுக்கு சென்று அலகு குத்தி பால் குடம் எடுத்துவந்து, அம்ம–னுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும்,

    மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை சொக்கத்தா ஊரணி சென்று அம்மனுக்கு சக்தி–கரகம் மற்றும் பூச்சொரிதல் எடுத்து திருவீதியுலா நடை–பெறும்.

    5-ந்தேதி காலை ஊர் பொங்கல், மாவிளக்கு வைப்பும், மாலை அக்கி–னிச்சட்டி எடுத்தல், இரவு முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 6-ந்தேதி 108 திருவிளக்கு பூஜை, 8-ந்தேதி தேவி கருமாரியம்மன் அருட்பிரசாதம் வழங்குதல், 11-ந்தேதி மறுபூஜை, கூழ் காய்ச்சி வழங்குதல், 20-ந்தேதி நாக சதுர்த்தியை முன்னிட்டு நாகருக்கும், புற்றுக்கும் சிறப்பு அபிஷேகமும், 21-ந்தேதி கருட பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய் துள்ளனர்.

    • தேவி கருமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிப்பார்.
    • சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இறைவன் இறைவி அருள் பாலிக்கவும் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    ஆங்கிலப் புத்தாண்டையொட்டி திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் வழிபாட்டிற்கு வரும் பக்தர்களுக்காக பல்வேறு சிறப்பு வசதிகள் செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவில் அலுவலகத்தில் கோவில் இணை ஆணையர் அருணாசலம் தலைமையில் நடைபெற்றது.

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ந் தேதி அன்று அம்மனை தரிசனம் செய்ய வருகை தரும் பக்தர்களுக்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறப்பது கடந்த 40 வருடங்களாக நடைமுறையில் இருந்து வரும்.

    நிலையில், இவ்வாண்டும் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்வது கோவிலுக்கு வருகைதரும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பான குடிநீர் வசதி, கழிவறை மற்றும் குளியலறை வசதி, அன்னதானம், பிரசாதம் வழங்குதல், பக்தர்களுக்கு இலவச மருத்துவ உதவி, வாகனங்கள் நிறுத்தும் வசதி, முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி எளிதாக தரிசனம் செய்யும் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்வது என முடிவு செய்யப்பட்டது.


    கோவிலில் நள்ளிரவு 12 மணிக்கு கோ பூஜை தொடங்கி, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் தங்க கவசத்தில் காட்சி அளித்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். மாலை சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தேவி கருமாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிப்பார்.

    திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவிலின் உப கோவிலான சம்மந்தரால் பாடல்பெற்ற தொண்டை நாட்டு சிவாலயமும், நான்கு வேதங்களும், வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்ட தலமான பாலாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் திருக் கோவிலிலும், 2025 புத்தாண்டு சிறப்பு தரிசனத்திற்காக டிசம்பர் 31-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபி ஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு இறைவன் இறைவி அருள் பாலிக்கவும் ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் தக்கார் டெக்கான் மூர்த்தி, நகராட்சி அதிகாரிகள், காவல்து றையினர், வியாபாரிகள் சங்கத்தினர், மாநகர போக்கு வரத்து, தீயணைப்புத்துறை, மின்வாரியம், உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

    ×