என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீதேவி கருமாரியம்மன்"

    • ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடி மாத உற்சவ விழா கோலாகலமாக நடந்து வருகிறது.
    • விழாவிற்கான ஏற்பாடு–களை அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

    மதுரை

    மதுரை ெஜய்ஹிந்த்புரம் பாரதியார் ரோடு வடிவேல் ெதருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அன்னை ஸ்ரீதேவி கருமாரி–யம்மன் கோவில் டிரஸ்ட் சார்பில் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்த கோவிலில் ஆடி மாத உற்சவ விழா கடந்த மாதம் 21-ந்தேதி கொடி–யேற்றத்துடன் தொடங்கியது. அன்று சக்தி பீடங்களுக்கு சென்று தீர்த்தம் கொண்டு வந்து 108 சங்காபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து விழா நாட் களில் ஸ்ரீதேவி கருமாரியம் மனுக்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் போடும் நிகழ்ச்சி, வாராஹி அம்மனுக்கு பஞ்சமி பூஜை, நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் காப்பு கட்டுதல், வளைகாப்பு திருவிழா, குழந்தையில்லா பெண்க–ளுக்கு மடி நிரப்பும் வைப–வம், அம்மன் மடி கட்டிய பச்சை பயிறு வழங்குதல் நடைபெற்றது.

    இன்று (3-ந்தேதி) காலை பதிெனட்டாம்படி கருப்ப–சாமிக்கு சந்தனகுடம் அபி–ஷேகம் நடந்தது. இரவு 12 மணிக்கு ஸ்ரீதேவி கருமாரி–யம்மனுக்கு கண்திறக்கும் வைபவம் நடக்கிறது. நாளை (4-ந்தேதி) ஏழு கன்னி குழந்தைகளுக்கு கன்னி பூஜை, வைகை ஆற்றுக்கு சென்று அலகு குத்தி பால் குடம் எடுத்துவந்து, அம்ம–னுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனையும்,

    மதியம் அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை சொக்கத்தா ஊரணி சென்று அம்மனுக்கு சக்தி–கரகம் மற்றும் பூச்சொரிதல் எடுத்து திருவீதியுலா நடை–பெறும்.

    5-ந்தேதி காலை ஊர் பொங்கல், மாவிளக்கு வைப்பும், மாலை அக்கி–னிச்சட்டி எடுத்தல், இரவு முளைப்பாரி எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 6-ந்தேதி 108 திருவிளக்கு பூஜை, 8-ந்தேதி தேவி கருமாரியம்மன் அருட்பிரசாதம் வழங்குதல், 11-ந்தேதி மறுபூஜை, கூழ் காய்ச்சி வழங்குதல், 20-ந்தேதி நாக சதுர்த்தியை முன்னிட்டு நாகருக்கும், புற்றுக்கும் சிறப்பு அபிஷேகமும், 21-ந்தேதி கருட பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜையும் நடைபெறும்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை அன்னை ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோவில் டிரஸ்ட் நிர்வாகிகள் செய் துள்ளனர்.

    ×