search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "special pooja in temples"

    • வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு அபிேஷக ஆராதனை களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • மூலவரான தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு, பழம், பால், தேன், சந்தனம், விபூதி, மலர் அபிேஷக ஆராதனை களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவரான தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதேபோல் வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்பாளுக்கும், அபிஷேக ஆராதனை களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு பிரதோஷ வழிபாட்டு கட்டளைதாரர்கள் வாயிலாக அன்னதானம் வழங்கப்பட்டது. வேப்பி லைப்பட்டி, கல்யாணகிரி, மோட்டூர் சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

    • குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.26 மணிக்கு பெயர்ச்சி ஆனார்.
    • நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன.

    கடலூர்:

    குரு பகவான் மீன ராசி யில் இருந்து மேஷ ராசிக்கு நேற்று இரவு 11.26 மணிக்கு பெயர்ச்சி ஆனார். இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று இரவு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கடலூர் மஞ்சக்குப்பம் வில்வநாதேஸ்வரர் கோவி லில் நேற்றிரவு குருவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாரதனை நடை பெற்றன. பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி கும்பிட்டனர்.

    இதேபோல நெல்லிக் குப்பம் பூலோகநாதர் கோவில், வரசித்தி விநா யகர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை காண்பிக் கப்பட்டன. தொடர்ந்து பக்தர்கள் விளக்கேற்றி குருவுக்கு மஞ்சள் ஆடை மற்றும் கொண்டைக்கடலை மாலை அணிவித்தும் வழிபட்டனர்.

    மேலும் குரு பெயர்ச்சி ஆவதால் பல்வேறு ராசிக் காரர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன.

    ×