என் மலர்
நீங்கள் தேடியது "சிவாலயங்களில் சிறப்பு பூஜை"
- வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு அபிேஷக ஆராதனை களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- மூலவரான தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பிரசித்திப் பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி நந்தீஸ்வரருக்கு, பழம், பால், தேன், சந்தனம், விபூதி, மலர் அபிேஷக ஆராதனை களுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. மூலவரான தான்தோன்றீஸ்வரர், தர்மசம்வர்த்தனி அம்பாளும் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதேபோல் வாழப்பாடி அக்ரஹாரம் காசி விஸ்வநாதர் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் நந்தீஸ்வரர், காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி அம்பாளுக்கும், அபிஷேக ஆராதனை களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர். பக்தர்களுக்கு பிரதோஷ வழிபாட்டு கட்டளைதாரர்கள் வாயிலாக அன்னதானம் வழங்கப்பட்டது. வேப்பி லைப்பட்டி, கல்யாணகிரி, மோட்டூர் சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.






