search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special place"

    • முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் தனசேகரன் சார்பாக ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
    • தாய், தந்தை, ஆசிரியர்கள் மூவரையும் போற்றி அவர்கள் சொல்படி நடக்க வேண்டும்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் தனசேகரன் சார்பாக ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    இதில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களான ஸ்ரீராம், ஆகாஷ், கணேஷ், சிவா ஆகியோருக்கு தலா ரூ.3,000 ரொக்க பரிசினை பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வன் வழங்கி பேசும்போது,

    கல்விதான் மாணவர்களுக்கு நிரந்தரமான சொத்து. தாய், தந்தை, ஆசிரியர்கள் மூவரையும் போற்றி அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். புத்தகங்களைப் படிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவை தான் உங்களை வாழ்வில் உயர்த்தும் என்றார். விழாவில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது.

    மனிதர்கள் தங்கள் வாழ்வில் சந்திக்கும், புனிதமான தெய்வீக அனுபவங்களை ஆன்மா மற்றும் உள்மனம் சார்ந்து தேக்கிவைக்க நமது மூளையில் தனிப்பகுதி அமைந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. #sacredexperiences #Specialplaceinbrain
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆன்மிக மனம் மற்றும் உடலமைப்பு துறை நிபுனர்கள் மற்றும் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சமீபத்தில் 27 இளம்வயதினரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

    கடந்தகால மனஅழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறை மற்றும் நிகழ்காலத்தில் அழுத்தத்தில் இருந்து விடுபட அவர்கள் கையாண்ட ஆன்மிக அனுபவங்கள் தொடர்பாக அவர்களின் மூளையின் வெளிப்பக்கம் விழிப்புணர்வு மற்றும் கவனித்தல் திறனுக்கு காரணமாக உள்ள சாம்பல்நிற பகுதியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் ஆய்வு நடத்தி, மூளைக்குள் நடைபெறும் மாற்றங்கள் பதிவு செய்யப்பட்டது.

    ஆன்மிக அனுபவங்கள் மதம்சார்ந்து அமைந்திருக்காவிட்டாலும், இயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஆர்வத்துடன் ஈடுபடுதல் போன்ற தெய்வீக அனுபவங்களை தேக்கி வைக்க இந்த பகுதியில் தனி இடம் அமைந்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.


    இயற்கையோடு சங்கமமாகி விடுதல், விளையாட்டுப் போட்டிகளின்போது தன்னிலை மறந்து ஒருமித்த ஆர்வத்துடன் ஈடுபடுதல் உள்ளிட்ட ஆன்மிகநிலை சார்ந்த அனுபவங்கள் மக்களின் வாழ்வில் விருப்பத்துக்குரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பலமான காரணங்களாக அமையும்.

    மூளையில் பதிவாகும் ஆன்மிக அனுபவங்களுக்கான அடிப்படை காரணங்களை அறிந்து கொள்வதன் வாயிலாக, மனநல பாதிப்பு மற்றும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் நிலையில் இருந்து மீளுதல் போன்வற்றை புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவிகரமாக அமைந்ததாக யேல் பல்கலைக்கழக மனநலத்துறை பேராசிரியர் மார்க் போட்டென்ஸா குறிப்பிட்டுள்ளார். #sacredexperiences #Specialplaceinbrain 
    ×