search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொதுதேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு
    X

    பொது தேர்வில் முதல் மதிப்பெண் பிடித்த மாணவருக்கு பரிசு வழங்கப்பட்டது.

    பொதுதேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசு

    • முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் தனசேகரன் சார்பாக ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.
    • தாய், தந்தை, ஆசிரியர்கள் மூவரையும் போற்றி அவர்கள் சொல்படி நடக்க வேண்டும்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு இப்பள்ளியின் முன்னாள் மாணவர் தனசேகரன் சார்பாக ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.

    இதில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களான ஸ்ரீராம், ஆகாஷ், கணேஷ், சிவா ஆகியோருக்கு தலா ரூ.3,000 ரொக்க பரிசினை பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அலுவலர் திராவிடச்செல்வன் வழங்கி பேசும்போது,

    கல்விதான் மாணவர்களுக்கு நிரந்தரமான சொத்து. தாய், தந்தை, ஆசிரியர்கள் மூவரையும் போற்றி அவர்கள் சொல்படி நடக்க வேண்டும். புத்தகங்களைப் படிப்பதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவை தான் உங்களை வாழ்வில் உயர்த்தும் என்றார். விழாவில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்த விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது.

    Next Story
    ×