என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீட்டுக் கடன்"

    • கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது.
    • கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது.

    சென்னை:

    ரிசர்வ் வங்கி குறைத்துள்ள வட்டி குறைப்பால் யாருக்கு லாபம் கிடைக்கும் என்பது குறித்த விவரம் தெரிய வந்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி அவ்வப்போது ரெப்போ வட்டியை குறைக்கிறது என்ற செய்தியை அடிக்கடி பார்த்து இருப்போம். வட்டி என்றால் தெரியும். ஆனால் ரெப்போ வட்டி என்றால் என்ன? அது பற்றி தெரிந்து கொள்வோம்.

    பொதுமக்களுக்கு வங்கிகள் வீட்டு கடன், தொழில் கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்குகிறது. இந்த கடன் தொகையை, வங்கிகள் தங்களுக்கு வரும் முதலீட்டு (டெபாசிட்) தொகை மற்றும் வங்கியின் இருப்பு மற்றும் லாபத்தொகையில் இருந்து வழங்குகிறது. ஆனால் இந்த தொகை மட்டுமே போதாது. எனவே வங்கிகள், ரிசர்வ வங்கியிடம் கடன் வாங்குகிறார்கள். இந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி தான் ரெப்போ வட்டி.

    வங்கிகள் வழங்கும் கடன்களின் வட்டியும், சேமிப்புகளுக்கு வழங்கும் வட்டியும், ரெப்போ வட்டியை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. பொருளாதார மந்தநிலை ஏற்பட்டாலோ, நுகர்வோர் செலவுகள் குறைந்தாலோ, தொழில்கள் நிதி நெருக்கடிக்கு உள்ளானாலோ, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை குறைக்கும்.

    இதன் மூலம் வங்கிகளும் வட்டி விகிதங்களை குறைத்து, கடன்களை அதிக அளவில் வழங்க உதவும். இதனால் பொதுமக்கள் வீடுகள் வாங்குவார்கள், தொழில்துறையில் முதலீடு செய்வார்கள். இதனால் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதையில் பயணிக்க ஆரம்பிக்கும்.

    இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் முக்கிய கருவிகளில் ஒன்றான ரெப்போ வட்டியை, கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி தொடர்ந்து குறைத்து வருகிறது.

    அதாவது கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக ரிசர்வ் வங்கி, தனது ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 என்ற அளவில் வைத்து இருந்தது. அதனை கடந்த பிப்ரவரியில் இது 6.25 என்றும், ஏப்ரல் மாதத்தில் 6, தற்போது ஜூன் மாதத்தில் 5.5 சதவீதம் என்றும் குறைத்து உள்ளது. ரெப்போ வட்டி ஒரு சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளதால் வங்கிகள் 0.5 சதவீதம் அளவுக்கு வீட்டுகடன் மற்றும் இதர கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைத்து உள்ளது.



    யாருக்கு லாபம்?

    உதாரணமாக 20 லட்சம் வீட்டு கடன், 20 ஆண்டு தவணையில் ஒருவர் 9 சதவீத வட்டியில் கடன் வாங்கி இருந்தால், அவரது மாதத்தவணை ரூ.17,995 இருக்கும். அது இப்போது 8.5 சதவீத வட்டியாக குறைக்கப்பட்டுள்ளதால் மாதத்தவணை ரூ.17,356 ஆக குறையும். இது மாதத்திற்கு ரூ.639 என்ற சிறிய தொகையாக தெரிந்தாலும், 20 ஆண்டுகளுக்கு இதனை கணக்கீடும் போது ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்து 133 லாபம் கிடைக்கும்.

    அதேபோல் சேமிப்பு மற்றும் டெபாசிட்களுக்கும் 0.5 சதவீதம் குறைய உள்ளது. அதனால் அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் முதிர்வு தொகை குறைவாகவே இருக்கும். உதாரணமாக ஒருவர் 7 சதவீத வட்டியில் 7 ஆண்டுக்கு ரூ.5 லட்சம் டெபாசிட் செய்து இருந்தால், இந்த வட்டி இப்போது 6.5 சதவீதமாக குறைக்கும் போது முதிவு தொகையில் ரூ.27 ஆயிரத்து 496 நஷ்டம் ஏற்படும்.

    எனவே ரெப்போ வட்டி குறைப்பு என்பது கடன் வாங்கியவர்களுக்கு லாபமாகவும், சேமிப்பு செய்பவர்களுக்கு நஷ்டமாகவும் இருக்கும்.

    எனவே, ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றம் என்பது நமது அன்றாட வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான பொருளாதார முடிவாகும். இந்த வட்டி விகிதத்தின் உயர்வும், தாழ்வும், நமது செலவுகள், சேமிப்புகள், முதலீடுகள் மற்றும் எதிர்கால திட்டங்களை நேரடியாக பாதிக்கக்கூடியவை ஆகும்.

    • நடுத்தர மக்களுக்கு நிதிச்சுமையை குறைக்க உதவும்.
    • ரூ.2.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும்

    புதுடெல்லி:

    நகரங்கள் மற்றும் கிராமங்களில் உள்ள தகுதியான பயனாளிகளுக்கு வீடுகள் வழங்குவதற்காக கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (பி.எம்.ஏ.ஓய்.) என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

    அதன்படி ஒருவரின் வருமான உச்ச வரம்பைப் பொறுத்து, அவர்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டியில் மானியம் வழங்கப்படும். அதற்கான உச்ச வரம்பு ஆண்டுக்கு ரூ.18 லட்சமாக இருந்தது. அவர்கள் பி.எம்.ஏ.ஒய். திட்டத்தின் கீழ் வட்டி மானிய பலன்களைப் பெற முடியாது.

    இந்நிலையில், பி.எம்.ஏ. ஓய். 2.0 திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.9 லட்சம் வரை சம்பாதிக்கும் நகர்ப்புற குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் கடனுக்கான வட்டி மானியத்தை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த சலுகை 120 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் வீடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.

    இதற்கான ஒப்புதலை மத்திய அரசு சமீபத்தில் வழங்கி உள்ளது. இத்திட்டம் ஏழைகள், குறைந்த வருவாய் உள்ளவர்கள், நடுத்தர மக்களுக்கு நிதிச்சுமையை குறைக்க உதவும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

    இதற்கு முன்னர் வட்டி மானிய திட்டம் 200 சதுர மீட்டர் கொண்ட சொத்து மற்றும் ரூ.18 லட்சம் வருவாய் உச்ச வரம்பாக இருந்தது. அதேபோல் அதிகபட்ச வட்டி மானியம் முன்பு சராசரியாக ரூ.2.3 லட்சமாக இருந்தது, தற்போது ரூ.1.8 லட்சமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    மேலும், பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் புலம்பெயர்ந்த தொழி லாளர்கள், மாணவர்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் குறைந்த வாடகையில் தங்குவதற்கு வீடுகள் (ஏ.ஆர்.எச்.) கட்டுவதற்கான ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

    அதன்படி30 சதுர மீட்டருக்குள் கட்டப்படும்ஒரு படுக்கை அறை வீட்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    இதுதொடர்பான முழு விவரங்களுடன் அரசு இணையதளம் தொடங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடகையை உள்ளூர் அரசு அதிகாரிகள் நிர்ணயம் செய்வார்கள். இதன்மூலம் மாத தவணையும், வட்டியும் கணிசமாகக் குறையும்.

    தவிர ஆண்டுக்கு ரூ.3 லட்சத்துக்குள் வருவாய் உள்ள பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் (இ.டபிள்யூ.எஸ்), வீடு கட்டிக் கொள்ள ரூ.2.5 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    ×