என் மலர்
நீங்கள் தேடியது "மணப்பெண் உயிரிழப்பு"
- சந்தியா குடும்பத்தினர் 2 நாட்களுக்கு முன்பு மணமகன் வீட்டுக்கு வந்துள்ளனர்.
- உயிரிழந்த சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி அடுத்த சிந்தலபட்டடை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதியின் மகள் சந்தியா (வயது 21). பி.காம். படித்துள்ளார். தற்போது இவர்கள் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் குடியிருந்து வருகின்றனர்.
சந்தியாவிற்கும், பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை, பாரதி நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது.
இன்று அத்திமாஞ்சேரி பேட்டை அடுத்த பலிஜகண்டிகை கிராமத்தில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக சந்தியா குடும்பத்தினர் 2 நாட்களுக்கு முன்பு மணமகன் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை சந்தியா குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. சத்தம் கொடுத்தும் எந்த பதிலும் வரவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சந்தியா மயங்கி நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.
அவரை உறவினர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அத்திமாஞ்சேரி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்ட இரு வீட்டாரும் பேரதிர்ச்சியில் உறைந்தனர். உயிரிழந்த சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்த பொதட்டூர்பேட்டை போலீசார் மணப்பெண் விஷம் குடித்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் கல்யாண வீட்டை கலங்கடித்தது.
- ஸ்ரேயா ஜெயினின் தந்தை சஞ்சய் ஜெயின் குழந்தை நல மருத்துவராவார்.
- சஞ்சய் ஜெயின் தனது மகளின் திருமணத்திற்காக ஆடம்பர ரிசார்ட்டை பதிவு செய்துள்ளார்.
டெல்லியை சேர்ந்த 28 வயதான ஸ்ரேயா ஜெயினின் திருமண நிகழ்ச்சி உத்தரகாண்ட் மாநிலம் நைனிடால் நகரில் உள்ள ஆடம்பர ரிசார்ட்டில் நடைபெற இருந்தது. திருமண நிகழ்ச்சியில் அவருடைய உறவினர்கள் கலந்து கொண்டனர்.
மணமகள் தனது மெஹந்தி விழாவில் நடனமாடும்போது சரிந்து விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஸ்ரேயா ஜெயினின் தந்தை சஞ்சய் ஜெயின் குழந்தை நல மருத்துவராவார். டெல்லியில் உள்ள துவாரகாவில் ஸ்ரேயா ஸ்பெஷலிஸ்ட் கிளீனிக் ஒன்றை நடத்தி வருகிறார். மணமகனும் அவரது குடும்பத்தினரும் லக்னோவை சேர்ந்தவர்கள்.
ஸ்ரேயா எம்பிஏ முடித்துள்ளார். மணமகன் லக்னோவில் ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை செய்கிறார்.
திருமணத்தில் ஸ்ரேயா ஜெயின் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிம்டால் இன்ஸ்பெக்டர் ஜக்தீப் நேகி கூறுகையில்,
சஞ்சய் ஜெயின் தனது மகளின் திருமணத்திற்காக ஆடம்பர ரிசார்ட்டை பதிவு செய்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது, சனிக்கிழமை மாலை நடைபெற்ற மெஹந்தி விழாவில் நடனமாடும்போது மணப்பெண் ஸ்ரேயா சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
மருத்துவர்கள் அவர் இருதய நுரையீரல் சிக்கல்களால் இறந்திருக்கலாம் என்பதை உறுதிப்படுத்தினர்.
மேலும் ஜெயின் குடும்பத்தினர் சட்ட நடவடிக்கைகளை கோரவில்லை என்றும் அவரது தகனத்தை நடத்தினார்கள் என்றும் அவர் கூறினார்.
- இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.
- 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.
பெங்களூரு:
கர்நாடகாவின் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ஆண்டர்சன்பேட்டை போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கெம்பாபுராவை அடுத்த செம்பரகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 30). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்தவர் லிகிதா ஸ்ரீ (20). இவர்கள் 2 பேரும் காதலித்தனர். இரு வீட்டார் சம்மதத்துடன் நேற்று காலை திருமணம் நடந்தது.
இதையடுத்து மதியம் புதுமணத்தம்பதிகளை முனியப்பபாவின் வீட்டில் இருந்த ஒரு அறையில் தனியாக வைத்தனர். அப்போது தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர். 2 பேரும் ரத்த காயத்தில் சுருண்டு விழுந்து கிடந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் லிகிதா ஸ்ரீ உயிரிழந்தார். இதையடுத்து குடும்பத்தினர் நவீன் குமாரை மீட்டு கோலார் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு நவீன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விசாரணையில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் 2 பேருக்கும் இடையே கருத்துவேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. இதில் அவர்கள் 2 பேரும் ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டனர்.
இதில் கத்திக்குத்து காயம் அடைந்த லிகிதா ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நவீன் குமார் படுகாயம் அடைந்தது தெரியவந்தது. தற்போது அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். புதுமண தம்பதி இடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து ஆண்டர்சன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான சில மணி நேரத்திலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதில், காதல் மனைவி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






