என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிலையன்ஸ் நிறுவனம்"

    • ‘ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்’ என்ற முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமான துணை நிறுவனம் உருவாக்கப்படுகிறது.
    • ஏ.ஐ.யின் அற்புதமான சக்தியை ‘புதிய காமதேனு’ என்று சொல்லலாம்.

    அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை அளிப்பதற்காக 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்' என்ற நிறுவனம் அமைக்கப்படும் என்று முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

    ரிலையன்ஸ் இ்ண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்கூட்டம் டெல்லியில் நடந்தது.

    அதில், நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பேசியதாவது:-

    10 ஆண்டுகளுக்கு முன்பு, ரிலையன்சுக்கு டிஜிட்டல் சேவைகள் ஒரு புதிய வளர்ச்சி எந்திரமாக இருந்தது. தற்போது, எங்களுக்கு முன்பு உள்ள வாய்ப்பாக ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்ளது.

    நாட்டில் அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் சேவை கிடைப்பதை ஜியோ உறுதி செய்தது. அதுபோல், அனைவருக்கும், அனைத்து இடங்களிலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கிடைப்பதற்காக 'ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ்' என்ற முழுக்க முழுக்க எங்களுக்கு சொந்தமான துணை நிறுவனம் உருவாக்கப்படுகிறது.

    இந்தியாவில் பிரமாண்ட அளவில் ஏ.ஐ. உள்கட்டமைப்பை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் உருவாக்கும். பசுமை ஆற்றலால் இயக்கப்படும் ஜிகாவாட் அளவிலான, ஏ.ஐ. தயார் தரவு மையங்களை அமைக்கும். ஜாம்நகரில் ஏற்கனவே இதற்கான பணிகள் தொடங்கிவிட்டன. இந்தியாவின் வளரும் தேவைகளுக்கு ஏற்ப இந்த வசதிகள் படிப்படியாக வழங்கப்படும்.

    இந்தியாவின் அடுத்த தலைமுறை ஏ.ஐ. உள்கட்டமைப்பை உருவாக்குதல், உலகளாவிய கூட்டாண்மைகளை உருவாக்குதல், இந்தியாவுக்கு ஏ.ஐ. சேவைகளை கட்டமைத்தல், ஏ.ஐ. திறனை வளர்த்தல் ஆகியவைதான் ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸின் 4 தெளிவான நோக்கங்கள்.

    வாடிக்கையாளர்கள், சிறு வணிகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நம்பகமான, பயன்படுத்துவதற்கு எளிதான ஏ.ஐ. சேவைகளை ரிலையன்ஸ் இன்டலிஜென்ஸ் வழங்கும்.

    கல்வி, சுகாதாரம், வேளாண்மை போன்ற தேசிய முக்கியத்துவம்வாய்ந்த துறைகளுக்கு தீர்வுகள் அளிக்கும். ஒவ்வொரு இந்தியருக்கும் மலிவான விலையில் சேவை கிடைக்கும்.

    ஏ.ஐ.யின் அற்புதமான சக்தியை 'புதிய காமதேனு' என்று சொல்லலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.
    • பிரத்தியேக கிரெடிட் கார்டு சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான கவுதம் அதானியின் அதானி குழுமம் ஆன்லைன் வணிகம் மற்றும் யுபிஐ பரிவர்த்தனை சேவைகளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    இந்தியாவில் தற்போது ஆன்லைன் வணிகம் மற்றும் பரிவர்த்தனைகளில் முதன்மையாக விளங்கும் கூகுள் நிறுவனம் மற்றும் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு போட்டியாக டிஜிட்டல் வணிகத்தில் அதானி குழுமம் களமிறங்குவது வணிக உலகில் முக்கியமான நகர்வாக பார்க்கப்படுகிறது.

     

    முதற்கட்டமாக பொது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) ஆகிவற்றில் பரிவர்த்தனைக்கான உரிமத்தைப் பெற அதானி குழுமம் விண்ணப்பிக்க உள்ளது. அதைத்தொடர்ந்து பிரத்தியேக கிரெடிட் கார்டு சேவைகளையும் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    அரசாங்கத்தின் கீழ் இயங்கும் டிஜிட்டல் வர்த்தகத்திற்கான ஓபன் நெட்வொர்க் (ONDC) உடன் இணைந்து ஆன்லைன் ஷாப்பிங் சேவைகளை வழங்க அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

     

    அதானி குழுமத்தின் பிற வணிகங்களான எரிவாயு மற்றும் மின் வணிக நுகர்வோர்களையும், விமான பயணிகளையும் அதன் ஆன்லைன் பரிவர்த்தனை சேவைகளை பயன்படுத்தச் செய்யும் என்று தெரிகிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் கூட்டு வருவாயில் முதல்முறையாக ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியதன் மூலம் வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது.
    • இந்தியாவின் மனப்பான்மை, ரிலையன்ஸை தொடர்ந்து புதுமைகளை உருவாக்கவும், அதன் அனைத்து நிறுவனங்களிலும் சிறந்து விளங்கவும் தூண்டுகிறது.

    2025-26ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் ரூ.12 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி, 2023-24 நிதியாண்டிற்கான கார்ப்பரேட் வருமான வரியாக ரூ. 1.86 லட்சம் கோடி செலுத்தி, இந்தியாவில் அதிக வரி செலுத்தும் நிறுவனங்களின் உச்சத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்-ஐ நிலைநிறுத்துவதற்கான அளவுகோலை இன்னும் அதிகமாக அமைத்துள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதன் கூட்டு வருவாயில் முதல்முறையாக ரூ.10 லட்சம் கோடியைத் தாண்டியதன் மூலம் வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளது.

    இந்த நிறுவனத்தின் மிக சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, 2023-24 நிதியாண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேட் வருமான வரி செலுத்துதல் அதன் முந்தைய ஆண்டு பங்களிப்பான ரூ. 1.77 லட்சம் கோடியை விட ரூ. 9,000 கோடியை தாண்டியுள்ளது. இது இந்தியாவின் முன்னணி வரி செலுத்தும் நிறுவனமாக நிறுவனத்தின் நிலையை வலுப்படுத்தி உள்ளது.

    ஆனால் இது நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையில் பிரதிபலிக்கும் ஒரே சாதனையல்ல, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியது, ரூ. 20 லட்சம் கோடி சந்தை மூலதன வரம்பை தாண்டிய முதல் இந்திய நிறுவனமாக, ஆண்டுக்கு 27% அதிகரித்து, உலகளவில் மிகப்பெரிய நிறுவனங்களில் 48-வது இடத்திற்கு உயர்த்துள்ளது.

    வருடாந்திர அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சியின் ஒரு பகுதியாக இருப்பதில் அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

    நிச்சயமற்ற உலகில் ஸ்திரத்தன்மை மற்றும் வளர்ச்சியின் கலங்கரை விளக்கமாக இந்தியா உருவானது 1.4 பில்லியன் இந்தியர்களின் கூட்டு முயற்சிகளுக்கு சான்றாகும். இந்தியாவின் மனப்பான்மை, ரிலையன்ஸை தொடர்ந்து புதுமைகளை உருவாக்கவும், அதன் அனைத்து நிறுவனங்களிலும் சிறந்து விளங்கவும் தூண்டுகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் அதன் அசாதாரண முன்னேற்றத்திற்கு பங்களிப்பது ரிலையன்ஸ் குடும்பத்திற்கு மிகப்பெரிய பெருமையாகும் என்று கூறி உள்ளார்.

    ×