என் மலர்
நீங்கள் தேடியது "வேட்டைக்காரன் சுவாமி கோவில்"
- ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா.
- 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் ஊரணிக்கரையில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழா 2 வாரம் நடைபெறும்.
அதன்படி முதல் திருவிழா கடந்த செவ்வாயன்று நடந்தது.இந்நிலையில் இந்த வருடத்திற்கான 2-வது படையல் திருவிழா இன்று நடந்தது. இதில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது.
பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் வேட்டைக்காரனுக்கு பலியிடப்பட்டது. அதன்பின் நள்ளிரவு முழுவதும் பக்தர்களால் ஏராளமான அண்டாக்களில் அசைவ உணவு சமைக்கப்பட்டது.
பின்னர் இன்று காலை சுவாமிக்கு அந்த உணவு படையல் போடப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது. இதனையடுத்து நீண்ட வரிசையில் கூடியிருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு அந்த உணவு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் நத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
வழிபாட்டில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அசைவ உணவு அன்னதானமாக வழங்கப்பட்டது. விடிய விடிய நடந்த இந்த திருவிழாவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
- பக்தர்கள் கிடாய்கள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர்.
- சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உலுப்பகுடி கிராமத்தில் வேட்டைக்காரன் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா வருடந்தோறும் மாசி மாதத்தில் பாரம்பரியமாக நடந்து வருகிறது. இந்த திருவிழாவில் பெண் குழந்தை முதல் வயதான பெண்கள் வரை யாரும் பங்கேற்க அனுமதி கிடையாது.
இந்நிலையில் இந்த வருடத்திற்கான படையல் திருவிழா இன்று நடந்தது. முன்னதாக வேட்டைக்காரன் சுவாமிக்கு நேர்த்திக்கடன் வைத்திருந்த பக்தர்கள் கிடாய்கள், அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களை காணிக்கையாக வழங்கினர். இதில் நள்ளிரவு 1 மணிக்கு மேல் சுவாமிக்கு பொங்கல் வைக்கப்பட்டு விழா தொடங்கியது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொடுத்த 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு 10-க்கும் மேற்பட்ட அண்டாக்களில் சாதம் மற்றும் ஆட்டுகறி உணவு சமைக்கப்பட்டது. நள்ளிரவு தொடங்கி விடிய விடிய இதனை ஆண்களே தயாரித்தனர். பின்னர் இன்று காலை 5.45 மணிக்கு வேட்டைக்காரன் சுவாமிக்கு அந்த உணவு படையலிடப்பட்டது.
பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தது. தொடர்ந்து சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து வந்து கோவில் முன்பு கூடியிருந்த 3-ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு சில்வர் பாத்திரங்களிலும், டிபன் பாக்ஸ்களிலும் சாதமும், ஆட்டுக்கறி குழம்பும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உலுப்பகுடி ஊர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர். திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஏராளமான ஆண்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்ததுடன் உணவருந்தியும் சென்றனர்.






