என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமெரிக்க ஆயுதங்கள் விற்பனை"

    • இந்திய அதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • அமெரிக்காவிடம் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் செல்ல இருந்தார்.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார்.

    டிரம்ப் உடனுடக்குடன் முடிவை மாற்றிக்கொள்பவர் என்பதால் இந்திய அதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விவகாரத்தில் பரிட்சயம் கொண்ட 3 இந்திய அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்ததாக Reuters செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

    அமெரிக்காவிடம் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஓரிரு வாரங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அவரது பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவுடனான ஆயுத கொள்முதல் பேச்சுவார்த்தைகளை நிறுத்தியதாக வெளியான செய்திகளை பொய்யானவை என்று மத்திய அரசு மறுத்துள்ளது.

    பாதுகாப்பு அமைச்சக அதிகாரி கூறுகையில், "அமெரிக்காவிலிருந்து பாதுகாப்பு கொள்முதல் தொடர்பான பேச்சுவார்த்தைகளை இந்தியா நிறுத்தியதாக வெளியான செய்திகள் தவறானவை மற்றும் ஜோடிக்கப்பட்டவை.

    பல்வேறு கொள்முதல் செயல்முறைகள் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளின்படி நடந்து வருகின்றன என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று தெரிவித்தார். 

    • ல் இந்திய அதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • Reuters செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

    ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 50 சதவீத வரி விதித்தார்.

    டிரம்ப் உடனுடக்குடன் முடிவை மாற்றிக்கொள்பவர் என்பதால் இந்திய அதிகாரிகள் வரிவிதிப்பு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் செயல்முறையை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த விவகாரத்தில் பரிட்சயம் கொண்ட 3 இந்திய அதிகாரிகள் இந்த தகவலை தெரிவித்ததாக Reuters செய்தி நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது.

    அமெரிக்காவிடம் புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தம் தொடர்பாக மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்னும் ஓரிரு வாரங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், அவரது பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே இந்த மாத இறுதியில் மோடி சீனா செல்ல உள்ளதும், ரஷிய அதிபர் புதின் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா வர உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைனுக்கு தொடர்ந்து அமெரிக்கா ராணுவ உதவி செய்து வருகிறது
    • ஆயுத விற்பனை அமெரிக்க வெளியுறவு கொள்கையின் முக்கிய அம்சம்

    கடந்த 2023ல் அயல்நாடுகளுக்கு அமெரிக்கா விற்பனை செய்துள்ள ராணுவ தளவாடங்களின் மதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

    2022 பிப்ரவரி மாதம் ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் தீவிரமாக போரிட்டு வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா பெருமளவில் ராணுவ தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை தொடர்ந்து வழங்கி வருகிறது.

    2023க்கான கணக்கெடுப்பின்படி இதுவரை இல்லாத அளவிற்கு $238 பில்லியன் அளவிற்கு அமெரிக்க ஆயுதங்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை ஆகி உள்ளது.

    அமெரிக்காவை மையமாக கொண்ட லாக்ஹீட் மார்டின், ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ராப் க்ரம்மேன் உள்ளிட்ட தனியார் ராணுவ தளவாட நிறுவனங்கள் செய்த விற்பனையை தவிர, அமெரிக்க அரசே நேரடியாக விற்பனை செய்த $81 பில்லியன் வணிகமும் இதில் அடங்கும்.

    இப்பட்டியலில் போலந்து ($29.75 பில்லியன்) முன்னணியில் உள்ளது.

    அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி ($8.5 பில்லியன்), பல்கேரியா ($1.5 பில்லியன்), நார்வே ($1 பில்லியன்), செக் குடியரசு ($5.6 பில்லியன்) உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

    ஐரோப்பிய நாடுகளை தவிர, தென் கொரியா ($5 பில்லியன்), ஆஸ்திரேலியா ($6.3 பில்லியன்), ஜப்பான் ($1 பில்லியன்) ஆகியவை அமெரிக்காவிற்கு சாதகமான ஆயுத விற்பனை வர்த்தகத்திற்கு உதவும் நாடுகள் ஆகும்.

    இது குறித்து அமெரிக்க அரசு, "பிராந்திய மற்றும் உலக பாதுகாப்பிற்கு நீண்டகால அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ராணுவ பாதுகாப்புக்கான வர்த்தகமும், ஆயுத விற்பனையும் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையில் முக்கியமான அம்சம்" என தெரிவித்தது.

    ஆயுத விற்பனையில் அமெரிக்காவிற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷியாவிடமிருந்து வாங்குவதை நிறுத்திய பல உலக நாடுகள் அமெரிக்காவிடம் வாங்க தொடங்கி உள்ளதே இதற்கு முக்கிய காரணம் என தெரிகிறது.

    அமெரிக்க அரசிடம் இருந்து ராணுவ தளவாடங்கள் மற்றும் ஆயுதங்கள் வாங்க விரும்பும் நாடுகள், அமெரிக்காவின் தனியார் ராணுவ தளவாட விற்பனை நிறுவனங்களிடம் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்தி பெற்று கொள்ளலாம் அல்லது தங்கள் நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க ராணுவ அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியும் வாங்கலாம்.

    ஆனால், இரண்டு வழிமுறைகளுக்கும் அமெரிக்க அரசின் முன்அனுமதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    ×