என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாசுரம்-25"

    • பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே!
    • திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே!

    திருப்பாவை

    பாடல்

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர்இரவில்

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

    தரிக்கிலா னாகித் தான் தீங்கு நினைந்த

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

    அருத்தித்து வந்தோம்; பறைதருதியாகில்

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி

    வருத்தமுந் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்

    வாசுதேவனின் மனைவியான தேவகிக்கு நீ மகனாக பிறந்தாய். அதே இரவில் ஆயர்பாடியில் நந்தகோபனுக்கும் யசோதைக்கும் மகனாகி மறைந்து வளர்ந்தாய். இவைகளை தாங்கிக்கொள்ள முடியாத கம்சன், உனக்கு தீங்கு செய்ய நினைத்தான். அவனுடைய தீய எண்ணத்தை அழித்து நெருப்பாக நின்று அச்சத்தை ஏற்படுத்தினாய். பக்தர்களுக்கு அருள்புரியும் நெடுமாலே! நீயே சரண் என்று உன்னை வணங்கி உன் அருள் தேடி வந்துள்ளோம். நாங்கள் நினைத்த வரத்தை அருளினால் அதனைப் பெற்று உயர்ந்த அருட்செல்வத்தால் உன் பெருமைகளை பாடித்துதிப்போம். எங்கள் எல்லா துயரங்களும் மறைந்து விடும்!

    திருவெம்பாவை

    பாடல்

    பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்

    போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

    கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

    கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

    சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா

    சிந்தனைக் கும்அரி யாய்எங்கள் முன்வந்

    தேதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

    எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.

    விளக்கம்

    குளிர்ச்சி பொருந்திய வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் உறையும் சிவபெருமானே! நீ பஞ்சபூதங்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஒவ்வொன்றிலும் நிறைந்து இருக்கிறாய். இருந்தும் உன்னை பிறப்பும், இறப்பும் இல்லாதவன் என்று புலவர்கள் புகழ்ந்து கூறி ஆடிப்பாடுகின்றனர். உன்னை கண்டறிந்தவர்கள், யார் என்று கேட்டு அறிந்தவர்கள் யாரும் இல்லை. சிந்தனைக்கு எட்டாதவனாக இருந்தாலும் எங்கள் முன் நேரில் தோன்றி நாங்கள் செய்கின்ற தவறுகளையும், குற்றங்களையும் மாற்றி அமைப்பவன் நீ நாங்கள் செய்யும் தவறுகளை நீக்கி எங்களுக்கு அருள்வாயாக! எம்பெருமானே பள்ளியெழுந்து வந்து அருள்புரிவாயாக.

    • எங்களிடம் மிகுந்த கருணையுடைய ஒப்புயர்வற்ற கண்ணனே!
    • உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்தருள்வாய்!

    திருப்பாவை

    பாடல்:

    ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில்

    ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

    தரிக்கிலா னாகித்தான்த்தான் தீங்கு நினைந்த

    கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

    நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை

    அருத்தித்து வந்தோம்; பறைதருதியாகில்

    திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

    வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    எங்களிடம் மிகுந்த கருணையுடைய ஒப்புயர்வற்ற கண்ணனே! ஒப்பற்ற தேவகியின் மகனாய்ப் பிறந்து, பிறந்த அதே இரவில் வேறொருத்தியான யசோ தையின் மகனாக மாற்றப்பட்டு மறைந்து வளர்ந்தாய்! ஆணவத்தால் உன்னை அழிக்க நினைத்த கம்சனின் வஞ்சகத்தை தோற்கடித்து, அவனது வயிற்றில் நெருப்பாக நின்ற பெருமானே! உன்னை நாடி வந்திருக்கிறோம். நோன்புக்குத் தேவையான அருளை நீ தருவாயானால், உனது அருட்செல்வத்தையும், தொண்டினையும் பாடுவோம். வருத்தம் நீங்கி மகிழ்ந்திருப்போம்.

    திருவெம்பாவை

    பாடல்:

    பூதங்கள் தோறும்நின்றாய் எனின் அல்லால்

    போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்

    கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்

    கேட்டறியோம்உனைக் கண்டறி வாரைச்

    சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா!

    சிந்தனைக் கும்அரியாய்! எங்கள் முன்வந்து

    ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

    எம் பெருமான்! பள்ளி எழுந்தரு ளாயே!

    விளக்கம்:

    திருப்பெருந்துறையில் வாழ்கின்ற அரசே! பஞ்சபூதங்கள் ஒவ்வொன்றிலும் நிறைந்து, பிறப்பும் - இறப்பும் இல்லாதவன் என்று புலவர்கள் உன்னைப் புகழ்ந்து பாடுவதை நாங்கள் கேட்டறிந்துள்ளோம். ஆனால் உன்னைக் கண்டறிந்தவர்கள் பற்றி நாங்கள் அறிந்ததில்லை. குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையின் மன்னவனே! எங்கள் முன் வந்து நாங்கள் செய்யும் தவறுகளை நீக்கி எங்களை ஆட்கொண்டு அருள்புரிகின்ற எமது தலைவனே! உனது திருப்பள்ளியில் இருந்து எழுந்தருள்வாய்! 

    ×