என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வித்தியாசமான தலவிருட்சம்"

    • பணிவிடை செய்வதும், அவனை நினைத்து உருகுவதும் அர்ச்சனையாகும்.
    • இறைவனை தூய்மையான மனத்துடன் பூஜிக்க வேண்டும். அதுதான் சேவை.

    கடவுளை வணங்குவதன் மூலமே ஒவ்வொரு மனிதனுக்கும் மனத்தூய்மையும், ஆத்மசாந்தியும் கிடைக்கிறது. தெய்வத்தை வணங்குவது என்பது தெய்வத்தை நாம் நெருங்கிக் காண்கிறோம் என்பதாகும். வணங்கும் முறைகளை நாம் ஒன்பது வகையாகப் பிரிக்கலாம். அற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    கவனித்தல்:-

    கவனிப்பது என்பதன் அர்த்தம் `கேட்பது' என்பதாகும். இது குறிப்பிடுவது என்னவென்றால், தெய்வக் கதைகளையும், தெய்வங்கள் குறித்த பிற விஷயங்களையும் பக்தியோடும் ஆர்வத்துடனும் அமைதியான இடத்தில் இருந்து கேட்க வேண்டும் என்பதாகும்.

    கீர்த்தனம்:-

    கீர்த்தனம் ஆலாபனை செய்வதென்பது, ஆராதனையின் மற்றொரு சிறப்பம்சமாகும். பகவானின் லீலைகளை மனதில் கொண்டு பயபக்தியுடன் கீர்த்தனையை இசைக்கோர்வையாக பாடுவது.

    நினைத்தல்:-

    பகவானைப் பற்றி நிரந்தரமாக சிந்திப்பதுதான் 'நினைத்தல்' என்பதாகும். மனதை சுத்தப்படுத்தி அதிகாலை முதல் இரவு வரை இறைவனைக் குறித்து சிந்திக்க வேண்டும்.

    சேவை:-

    நாம் ஒவ்வொருவரும் இறைவனின் சேவகர்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இறைவனை தூய்மையான மனத்துடன் பூஜிக்க வேண்டும். அதுதான் சேவை. நம்மை பகவானுக்கு முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு சேவை செய்ய வேண்டும்.

    தாசி:-

    சேவையின் மற்றொரு வடிவம் தாசி என்பது. தாசி என்பது, தனது வாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காக அர்ப்பணித்துச் சேவை செய்வதாகும். வாழ்க்கையில் வேறு எந்தவிதமான ஆசைகளோ, மோகங்களோ இல்லாமல் களங்கமற்ற பக்தியுடன் இறைவனுக்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்வதுதான் தாசிப் பணி.

    அர்ச்சனை:-

    உலகேஸ்வரனுக்கு நாம் சேவகர்கள் என்று கருதி பணிவிடை செய்வதும், அவனை நினைத்து உருகுவதும் அர்ச்சனையாகும்.

    வணங்குதல்:-

    மனம், சொல், செயல் இவற்றால் தியானம் நடத்தி மந்திரங்கள் சொல்லி அர்ப்பணிப்பதும், சாஸ்டாங்கமாக விழுந்து இறைவனோடு அன்புகொள்வதும் வணங்குதல் எனப்படும்.

    இணைப்பு:-

    இறைவன் ஒரு மனிதனுக்கு நன்மையாகவோ அல்லது தீமையாகவோ வழங்குவது எதுவானாலும், அது அவனது நன்மைக்காகத்தான் என்பதாகும்.

    ஆத்ம சமர்ப்பணம்:-

    நமது சொந்த உடல், மனது மற்றும் சர்வ அங்கங்களையும் முழு சந்தோஷத்துடன் இறைவனுக்கு சமர்ப்பிப்பதுதான் ஆத்ம சர்ப்பணம்.

     பிரசாதம் சாப்பிடும் இறைவன்

    தினமும் சுவாமிக்கு பூஜை செய்யும்போது கருவறையில் எறும்புகள் வரிசையாக ஊர்ந்து வந்து நைவேத்தியத்தினை எடுத்துக்கொள்கிறது. இதனை இறைவனே எறும்பு வடிவில் எடுப்பதாக ஐதீகம். இந்த நேரத்தில் இத்தல இறைவனை வணங்குவது மிகவும் சிறப்பு. இதனைக் காண நீங்கள் திருவெறும்பூர் செல்ல வேண்டும். எறும்பாக வரும் இறைவனின் பெயர் எறும்பீஸ்வரர்.

     தமிழ்ப் புத்தாண்டில் அன்னாபிஷேகம்

    சிவாலயங்களில் வழக்கமாக ஐப்பசி பவுர்ணமியில்தான் அன்னாபிஷேகம் நடைபெறும். ஆனால் தூத்துக்குடியில் உள்ள சங்கமேசுவரர் திருக்கோவிலில் தமிழ்ப்புத்தாண்டான சித்திரை முதல் நாளில் மூலவருக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது. மேலும் அங்குள்ள மற்ற மூர்த்தங்களுக்கும் அந்த நாளில் அன்னாபிஷேகம் செய்யப்படுவது அத்தலத்திற்குரிய கூடுதல் சிறப்பாகும்.

    அதிசய கிரகங்கள்

    கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலில் நவக்கிரகங்கள் புதுமையாகக் காட்சியளிக்கின்றன. ஆம், எல்லா ஆலயங்களிலும் இருப்பதுபோல் இங்கே நவக்கிரகங்கள் காட்சி தரவில்லை. மாறாக, ஒரு மண்டபத்தின் மேல் பகுதியில் இவை செதுக்கப்பட்டுள்ளன. அந்த மண்டபத்தின் நேர் கீழே ஒரு மேடை உள்ளது. நவக்கிரகங்களை வழிபடும் பக்தர்கள் அந்த மண்டபத்தை வலம் வந்து, தங்கள் கிரகங்களுக்கு பக்கமாக உள்ளது போல், மேடை அருகில் நின்று வழிபடுகிறார்கள். இதுபோல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை.

    வித்தியாசமான தலவிருட்சம்

    * ஈரோடு மாவட்டம் காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் திருக்கோவிலின் சிவலிங்கம் மணலில் வடிக்கப்பட்டது. கோவில் வளாகத்தில் உள்ள பாறை மீது தல விருட்சமான அத்திமரம் உள்ளது. மிகப் பழமையான இம்மரத்தில் புதிய கிளைகள் தோன்றுவதில்லை என்பது வியப்புக்குரியது.

     * தீர்த்தனகிரி சிவக்கொழுந்தீசர் ஆலயத்தில் இரு கால்களையும் மடக்கி பீடத்தின் மீது அமர்ந்த கோலத்தில் அபூர்வமான காட்சியாக அருள் தருகிறார் தட்சிணாமூர்த்தி. இவரது காலுக்குக் கீழே முயலகன் இல்லை. நான்கு சீடர்கள் மட்டுமே உள்ளனர்.

     * தஞ்சாவூா் மாவட்டத்தில் உள்ள திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில், இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர் மீது பங்குனி, புரட்டாசி ஆகிய இரு மாதங்களிலும் பவுர்ணமி அன்றும், அதற்கு முன்பு இருநாளும், பின் வரும் இருநாளிலும் சந்திரனின் கிரகணங்கள் மூர்த்தியின் மீது விழுகிறது.

    ×