என் மலர்
நீங்கள் தேடியது "உதவிதொகை"
- பெரம்பலூரில் பெண்கள் உதவி தொகை திட்டத்தில், 88சதவீத விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளது
- 76ஆயிரம் விண்ணப்பங்கள் பதிவேற்றம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் 2-ம் கட்ட சிறப்பு முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. 88 சதவீதம் பதிவு ஏற்கனவே நடந்த முதற்கட்ட சிறப்பு முகாம்களில் 74,311 விண்ணப்பங்களும், முதற்கட்ட முகாம்களில் விடுபட்டவர்களுக்காக நடைபெற்ற முகாமில் 2,189 விண்ணப்பங்களும் என மொத்தம் 76,500 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. முதற்கட்டமாக நடந்த முகாம்களில் 95 சதவீத விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட குடும்ப தலைவிகளிடம் வழங்கப்பட்டு, அவற்றில் 88 சதவீத விண்ணப்பங்கள் திரும்ப பெறப்பட்டு ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நவீன முறை சலவையகங்கள் அமைக்க நிதி உதவி வழங்கப்படும் என்று அரியலூர் கலெக்டர் ஆனி மேரி அறிவித்துள்ளார்
- பத்து பேர் கொண்ட குழுவிற்கு 3 லட்சம் ரூபாய் வரை உதவித்தொகை கிடைக்கும்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக சலவை தொழிலில் ஈடுபட்டு வருகின்ற (ஆண்/பெண்) குறைந்தபட்சம் 10 நபர்களை கொண்ட குழுவாக அமைத்து நவீன முறை சலவையகங்கள் ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில் சலவை தொழிலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் உபகரணங்கள், இடைநிகழ் செலவு மற்றும் பணி மூலதனம் ஆகியவைகளுக்காக அதிகபட்சமாக குழு ஒன்றுக்கு ரூ.3 இலட்சம் வீதம் வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் பயன்பெற, குழு உறுப்பினர்களின் குறைந்தபட்ச வயது வரம்பு 20. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் பயிற்சி பெற்ற நபர்களை கொண்ட குழுவிற்கு முன்னுரிமை வழங்கப்படும். 10 நபர்களை கொண்ட ஒரு குழுவாக இருத்தல் வேண்டும். குழுவிலுள்ள பயனாளிகளின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்படிவம் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை (அறை எண்-16) அணுகி பெற்றுக்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
- கடந்த 2 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுவிற்கு சுழல் நிதியாக 25,000 கோடி வழங்கப்பட்டுள்ளது
- அமைச்சர் மெய்யநாதன் தகவல்
ஆலங்குடி,
ஆலங்குடி அருகே வடகாட்டில் உள்ள ஆதி திராவிடர் காலனிக்கு திரு வள்ளுவர் நகர் என பெ யரிடப்பட்டு பெயர் பல கையை சுற்றுச்சூழல் அ மைச்சர் மெய்ய நாதன் தி றந்து வைத்தார். இதனை தொடர்ந்து அவர் பேசு கையில்,
பெண்களுக்கு இலவச பஸ் பயணத்திற்கு அனுமதி அளித்து திட்டத்தை நிறைவேற்றி வைத்த நமது முதல்வர் தற்போது மாதந்த றும் ரூ.ஆயிரம் வழங்கி அவர்களின் துயர் துடை த்துள்ளார். தமிழ்நாட்டில் 31,000 பள்ளிகளில் 17 லட்சம் மாணவ மாணவி களுக்கு காலை உணவு வழங்கி மாணவ மாணவி களின் பசியை தீர்த்துள்ளார். அதேபோல் இளைஞர்கள் தொழில் தொடங்க டிக் மூலம் மானியத்துடன் கூடி ய கடன் வழங்கி வருகிறார். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடந்த 2 ஆண்டுகளில் 25 ஆயிரம் கோடி வழங்கியுள்ளார். இந்த ஆண்டு ரூ. 30 ஆயிரம் கோடி வழங்க இளை ஞர்நலன் மற்றும் விளை யாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி நேரடி கண்காணிப்பில் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்க உள்ளார் . இதுபோல் தமிழக மக்கள் அனைத்து தரப்பி னரும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையும் வகையில் இரவு பகலாக சிந்தித்து திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். எ னவே தமிழக மக்கள் அனை த்து துறைகளிலும் மேலும் முன்னேற்றம் அடைய முதல்வர் ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார்.






