என் மலர்
நீங்கள் தேடியது "சுகாதார அதிகாரிகள்"
- சுகாதார அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.
- கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர், கச்சைகட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ராஜ்குமார் ஆலோசனையின்பேரில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள்பிரபாகரன், இனிய குமார் சதீஷ் ஆகியோர் வாடிப்பட்டி பகுதியில் உள்ள ஓட்டல், டீக்கடை, உணவு விடுதிகள், கறிக்கடை, கோழிக்கடை, பலசரக்கு கடைகளில் பாலிதீன் பயன்பாடு பற்றியும், பெட்டிக் கடைகளில் தடை செய்த போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்றும் பிளாஸ்டிக் பாலிதீன் பைகள் உள்ளதா? என்றும் கடைகளின் உரிமம் உள்ளிட்ட பலவகை சோதனைகள் செய்து அபராதம் விதித்தனர்.
- மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
- ஜிபிஎஸ் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய சில யாத்ரீகர்கள் கடுமையான வயிற்றுப்போக்கால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து 2 கர்நாடக கிராமங்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஜி.பி.எஸ். (GBS) நோயால் பாதிக்கப்பட்ட யாத்ரீகர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சுகாதார அதிகாரிகளின் கூறுகையில், யாத்ரீகர்களின் நோய்க்கான காரணத்தை அறிய அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஜி.பி.எஸ். உள்ள 3 பேரில் 2 பேருக்கு வயிற்றுப்போக்கு, சுவாச நோய்த்தொற்று பாதிப்புகள் உள்ளது. இது பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கர்நாடக சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், ஜி.பி.எஸ். நோய் குறித்து கவலைப்படத் தேவையில்லை. எந்தவொரு அவசரநிலையையும் சமாளிக்க தனது துறை முழுமையாகத் தயாராக உள்ளது.
மகாராஷ்டிராவின் புந்தர்பூரில் இருந்து திரும்பிய 60 யாத்ரீகர்களில் 33 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர் என்றும், அவர்களின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜி.பி.எஸ். என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும், இது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு, புற நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
இருப்பினும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதில் இருந்து முழுமையாக மக்களை மீட்க முடியும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஜி.பி.எஸ். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பொதுவாக 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
- ஜி.பி.எஸ். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
- ஜிபிஎஸ் 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மும்பை:
ஜி.பி.எஸ். என்பது ஒரு அரிய தன்னுடல் தாக்க நிலையாகும், இது உடலில் நோயெதிர்ப்பு அமைப்பு, புற நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. இது உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் தசை பலவீனம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது.
இருப்பினும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதில் இருந்து முழுமையாக மக்களை மீட்க முடியும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஜி.பி.எஸ். எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் இது பொதுவாக 30 முதல் 50 வயதுக்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் (ஜி.பி.எஸ்.) எனப்படும் பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது.
இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மொத்தம் 225 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 197 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 28 பேர் சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இதுவரை 12 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 6 பேருக்கு ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 6 பேர் இந்த பாதிப்பினால் உயிரிழந்து இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. அது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
இதுவரை 179 நோயாளிகள் குணமடைந்து, வீடு திரும்பியுள்ளனர். 24 பேர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் வென்டிலேசனில் வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
மாசுபட்ட தண்ணீரால் இந்த மர்ம நோய், பாதிப்பு ஏற்படுத்தி நோயாளிகளை பலவீனப்படுத்துகிறது என கூறப்படுகிறது. அதனால், குடிமக்கள் கொதிக்க வைத்த குடிநீர் உள்பட தரமுள்ள குடிநீரை குடிக்கவும், புதிதான மற்றும் தூய்மையான உணவை எடுத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.






