என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராட்சத இயந்திர விபத்து"

    • காயமடைந்தவர்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ.50,000ம் வழங்கப்படும்.
    • விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவிப்பு.

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது.

    இங்கு, இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிர்டர் என்கிற ராட்சத இயந்திரம் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    இதில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதை அடுத்து, உயிரிழந்தர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

    இதற்கிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஒரு நாள் பயணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி மகாராஷ்டிராவிற்கு விரைந்துள்ளனர்.

    இந்நிலையில், ராட்சத இயந்திரம் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா மாநில முதல்வர் ஷிண்டே ஆகியோர் இழப்பீடு அறிவித்துள்ளனர்.

    அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000ம் பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இருந்து வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

    தொடர்ந்து, அம்மாநில முதல்வர் ஷிண்டே இறந்த ஒவ்வொரு தொழிலாளியின் குடும்பத்திற்கும் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்றும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

    • ராட்சத கிரேன் சரிந்த விபத்தில் 2 தமிழக என்ஜினீயர்களும் உயிரிழந்தனர்.
    • விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, மாநில முதல் மந்திரி இழப்பீடு அறிவித்தனர்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இங்கு இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிர்டர் என்கிற ராட்சத இயந்திரம் நேற்று திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

    தகவலறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளை அகற்றி பலரை பிணமாக மீட்டனர். இதில் என்ஜினீயர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என 20 பேர் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த என்ஜினீயர்கள் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதில் ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி ஊராட்சி வி.ஐ.பி. நகரை சேர்ந்த சந்தோஷ்(36). மற்றொரு என்ஜினீயர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த கண்ணன்(23) என்பது தெரிய வந்தது. விபத்து குறித்த தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

    விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் 2 ஒப்பந்ததாரர்கள் மீது சகாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×