ராட்சத கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு - 2 தமிழக என்ஜினீயர்கள் பலியான சோகம்

ராட்சத கிரேன் சரிந்த விபத்தில் 2 தமிழக என்ஜினீயர்களும் உயிரிழந்தனர். விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, மாநில முதல் மந்திரி இழப்பீடு அறிவித்தனர்.
ராட்சத கிரேன் சரிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 20 ஆக உயர்வு - 2 தமிழக என்ஜினீயர்கள் பலியான சோகம்
Published on

மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் சாபுர் என்ற இடத்தில் 3ம் கட்ட பணி நடைபெற்று வருகிறது. இங்கு இரண்டு தூண்களுக்கு இடையில் கான்கிரீட் தளத்தை தூக்கி வைப்பதற்காக பயன்படுத்தப்படும் கிர்டர் என்கிற ராட்சத இயந்திரம் நேற்று திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து போலீசார், தீயணைப்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இடிபாடுகளை அகற்றி பலரை பிணமாக மீட்டனர். இதில் என்ஜினீயர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் என 20 பேர் உயிரிழந்தாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த என்ஜினீயர்கள் 2 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. இதில் ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் போகனப்பள்ளி ஊராட்சி வி.ஐ.பி. நகரை சேர்ந்த சந்தோஷ்(36). மற்றொரு என்ஜினீயர் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் பகுதியை சேர்ந்த கண்ணன்(23) என்பது தெரிய வந்தது. விபத்து குறித்த தகவலறிந்த அவர்களது குடும்பத்தினர் அதிர்ச்சியும், சோகமும் அடைந்தனர்.

விபத்து தொடர்பாக கட்டுமான நிறுவனத்தின் 2 ஒப்பந்ததாரர்கள் மீது சகாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com