என் மலர்
நீங்கள் தேடியது "தென்காசி கடத்தல் வழக்கு"
- குருத்திகாவின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
- அரசு தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் போலீஸ் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது.
மதுரை:
தென்காசியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் குருத்திகா பட்டேலை அவரது குடும்பத்தினர் கடத்தியதாக காதலன் மாரியப்பன் வினித் தென்காசி மற்றும் குற்றாலம் போலீஸ் நிலையங்களில் புகார் செய்தார்.
அதன் பேரில் குருத்திகாவின் உறவினர் மற்றும் பெற்றோர்கள் என 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தங்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கக்கோரி மதுரை ஐகோர்ட்டில் அவர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அப்போது ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்கியும், முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் குருத்திகா பட்டேலின் உறவினர்களான விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் ஆகியோர் தங்களுக்கு முன் ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் ஏற்கனவே முன்ஜாமீன் கோரிய வழக்கில் மனுதாரர்கள் போலீஸ் நிலையத்தில் சரணடைய உத்தரவிடப்பட்டது. ஆனால் மனுதாரர்கள் சரணடையவில்லை. மேலும் விசாரணை நடைபெற்று வருவதால் முன்ஜாமீன் வழங்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதி, மனுதாரர் தரப்பில் முந்தைய முன்ஜாமீன் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை. மேலும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை பதிவு செய்து கொண்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
- நீதிபதி, தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் இங்கு இருக்கும்போது குருத்திகா பட்டேலை ஏன் அழைத்து வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.
- மனுதாரர்கள் தரப்பில் குருத்திகாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்று கேட்டனர்.
மதுரை:
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் வினீத் மாரியப்பன், என்ஜினீயர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா பட்டேல் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து குருத்திகாவின் பெற்றோர் குற்றாலம் போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரின் மீதான விசாரணைக்கு வினீத், குருத்திகா ஆகியோர் சென்று விட்டு திரும்பியபோது வினீத்தை தாக்கி விட்டு குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்திச் சென்று விட்டனர். இது தொடர்பாக 12-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டனர். சிலர் தலைமறைவாகி விட்டனர்.
இந்தநிலையில் தலைமறைவாக இருக்கும் சிலர் தங்களுக்கு முன் ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு இது தொடர்பாக குருத்திகாவிடம் விசாரிக்க வேண்டும். அவரை ஆஜர்படுத்துங்கள் என்று உத்தரவிட்டது. அதன் பேரில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆனால் குருத்திகாவை ஆஜர்படுத்தவில்லை.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், இந்த வழக்கு மிகவும் முக்கியமான வழக்கு. முன் ஜாமீன் கோரிய குருத்திகாவின் தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் ஆகியோர் எங்கு உள்ளனர்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர்கள் அனைவரும் தமிழகத்தில் தான் உள்ளனர் என்று வக்கீல் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதி, தந்தை, தாய் மற்றும் 2-ம் கணவர் இங்கு இருக்கும்போது குருத்திகா பட்டேலை ஏன் அழைத்து வரவில்லை? என கேள்வி எழுப்பினார்.
இதைத்தொடர்ந்து மனுதாரர்கள் தரப்பில் குருத்திகாவை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்துகிறோம் என்று கேட்டனர். ஆனால் அதற்கு நீதிபதி மறுப்பு தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை பொறுத்தவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள், சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று நீதிபதி தெரிவித்தார்.
- குருத்திகா காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, அவரது உறவினர்கள் அவரை கடத்தினர்.
- குருத்திகாவின் தந்தையை கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து இன்று தென்காசிக்கு அழைத்து வந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள கொட்டாக்குளத்தை சேர்ந்தவர் வினித். என்ஜினீயர். இவர் அதே பகுதியை சேர்ந்த குருத்திகா பட்டேல் என்பவரை காதலித்துள்ளார். அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகர்கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து குருத்திகா காதல் திருமணம் செய்து கொண்டதற்காக, அவரது உறவினர்கள் அவரை கடத்தினர். இது தொடர்பாக அளித்த புகாரின் பேரில் குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிஸ்தா பட்டேல், குருத்திகா 2-வது திருமணம் செய்ததாக கூறப்படும் மைத்திரிக், உறவினர்கள் விஷால், கீர்த்தி பட்டேல் மற்றும் சண்முகராஜ் உள்பட மொத்தம் 12 பேர் மீது குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் ஜாமீன், முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்கியும், முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் விசாரணை முடியும் வரை குருத்திகாவை கேரளாவில் உள்ள அவரது தாத்தா பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதற்கிடையே குருத்திகாவின் தந்தை நவீன் பட்டேலை கைது செய்வதற்காக குற்றாலம் போலீசார் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து குஜராத், கோவா, கேரளா உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அவரை கேரளாவில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்து இன்று தென்காசிக்கு அழைத்து வந்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






