என் மலர்
நீங்கள் தேடியது "50 சதவீதம் மானியம்"
- வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும்.
- தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்புக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையும் வழங்கப்படும்.
ஈரோடு:
தொழில் முனைவோர் மத்திய அரசு மீன்வளம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையின் மூலமாக 2021-22-ம் ஆண்டு முதல் தேசிய கால்நடை இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி வேலை வாய்ப்பு உருவாக்கம், தொழில் முனைவோர் மேம்பாடு, கால்நடை உற்பத்தி திறன் அதிகரிப்பு மற்றும் இறைச்சி, பால், முட்டை, கம்பளி உற்பத்தியை அதிகரிப்பதை இலக்காக கொண்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி கோழி வளர்ப்பு, செம்மறி யாடு வளர்ப்பு, வெள்ளாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்பு ஆகிய பணிகளை மேற்கொள்ள தொழில் முனைவோரை உருவாக்குதல் இலக்காகும்.
கோழி வளர்க்க முனைவோர் 1,000 நாட்டு கோழிகள் கொண்ட பண்ணை அமைத்து, முட்டை உற்பத்தி செய்து, கோழி குஞ்சு பொரிப்பகம் வழி கோழிக்குஞ்சுகள் உற்பத்தி செய்வதற்கு மூலதனத்தில் 50 சதவீதம் மானியமாக அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வளர்க்க 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை 2 தவணைகளில் வழங்கப்படும்.
பன்றி பண்ணை அமைக்க முனைவோருக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரையும், தீவனம் மற்றும் தீவனபயிர் சேமிப்புக்கு 50 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரையும் வழங்கப்படும்.
இந்த திட்டத்துக்கு தனி நபர், சுய உதவி குழுவினர், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்புபினர், விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கத்தினர் தகுதியா னவர்கள்.
திட்டத்துக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திட்ட அங்கங்களில் விண்ணப்பிக்கலாம். திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் https://nlm.udyamimitra.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகங்கள், ஈரோடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
- தோட்டக் கலைத்துறை மூலம் நடப் பாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ரூ.99.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- நிரந்தர கல்பந்தல் அமைப்பதற்கு 50 சதவீத மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறி பயிர்களில் தக்காளி மற்றும் பீன்ஸ் அதிக அளவில் பயிரிப்படுகிறது.
இவற்றில் பெரும்பாலா னவை வீரிய ஒட்டு ரகங்கள், இவை நன்கு வளர்ந்து கொண்டே காய்க்கும் தன்மை உடையது.
இந்த ரகங்களை சாதா ரண நடவு முறையில் நடவு செய்து பராமரிக்கப்படும் போது, அதனுடைய வளர்ச்சி, காய்க்கும் திறன் குறைந்து வருகிறது.
மேலும், 3 முதல் 5-வது முறை அறுவடையின் போதே பணியாட்களின் கால்களில் மிதிக்கப்பட்டு செடிகள் பாதிப்பு அடையும்.
இதனால் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க "டிரெல்லிஸ்" என்ற கொடிகளை தாங்கும் தடுப்பு குச்சிகள் அமைத்து கயிற்றில் செடிகளை கட்டி படர விட்டு வளர்க்கும் முறைக்கு தோட்டக்கலை துறை சார்பில் நடப் பாண்டில் 50 சதவீத மானிய மாக ஒரு எக்டேருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பீன்ஸ் மற்றும் தக்காளியில் தாங்கு குச்சி கட்டுவதால், செடிகள் தரையில் படராமல் மேல்நோக்கி வளர உதவு கிறது.
மண்ணிலிருந்து மேல்நோக்கி வளருவதால் பூச்சி மற்றும் அழுகல் நோயின் தாக்கத்தை குறைக்கிறது.
சூரிய ஒளியானது தாவரத்தின் அனைத்து பாகங்களுக்கும் சென்ற டைய உதவுகிறது. செடி களை நிலைநிறுத்தி, அதிக மழை மற்றும் காற்றில் இருந்து சாய்ந்து விடும் அபாயத்தை குறைக்கிறது. சீரான வளர்ச்சியை ஊக்கு விக்கிறது.
மேலும், பழங்கள் தரையில் படாமல் இருப்ப தால் சேதம் ஏற்படாமல் மகசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இம்முறை யில் நல்ல வரிசை இடை வெளி இருப்பதால் அறு வடையை எளிதாக்குகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தோட்டக் கலைத்துறை மூலம் நடப் பாண்டில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம் ரூ.99.20 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், இத்திட்டத்தில் முருங்கை நாற்றுகள் ஒரு எக்டேருக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் நிரந்தர கல்பந்தல் அமைப்பதற்கு 50 சதவீத மானியமாக ஒரு எக்டேருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.
ஆதிதிராடவிர், பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
மேலும், இந்த திட்டத்தின் 80 சதவீத இலக்கானது கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும், டிரெல்லிஸ் திட்டத்தில் சொட்டு நீர் பாசன முறையை கடை பிடித்தால் நீர் செலவை குறைத்து அதிக மகசூல் பெறலாம். ஒரு பயனாளி அதிகபட்சமாக ஒரு எக்டேர் வரை பெற்று பயன் பெறலாம்.
மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவ சாயிகள் உரிய ஆவணங் களுடன் சம்பந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், உழவன் செயலி மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வலைதளம் போன்ற இணைய வலை தளங்கள் மூலம் விண்ணப் பிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






