என் மலர்
நீங்கள் தேடியது "போலீசார் விசாரனை"
- ஆண்டவர் என்பவர் 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்,
- வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே இந்திலி பகுதியை சேர்ந்த ஆண்டவர் (வயது 33) இவர் 5 ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் 18-ந் தேதி ஆண்டவருக்கு வயிற்று வலி அதிகமானது. இதனால் வலி தாங்க முடியாமல் வயலுக்கு அடிக்கவைத்திருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்தார்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் இவரை மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக ஆண்டவர் இறந்தார். இது குறித்து சின்னசேலம் போலீசார் வழக்கபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.
- புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது.
புதுச்சேரி:
புலியை பார்த்து பூனை சூடுபோட்ட விடுகதை மாதிரி நாயை புலியாக மாற்ற அதை புலிபோல் பெயிண்ட் அடித்து வீதியில் உலாவவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் பகுதியில் புலி உலாவுவதாக பொதுமக்களிடையே தகவல் பரவியது.
மலைவனப்பகுதியாக இருந்தால் புலி வரும் இங்கு எப்படி புலி வந்தது என்று பொதுமக்களிடையே கேள்வி எழுந்தது. உண்மையிலேயே புலி தான் வருகிறதா? அதனை பார்த்துவிட வேண்டும் என்று இளைஞர்கள் திட்டமிட்டனர்.
அப்போது புலி வருகிறது என்று சிலர் அங்கு கூச்சலிட்டவாறு சென்றனர்.
இதனை கேட்ட இளைஞர்கள் சிலர் அங்கு திரண்டு சென்றனர். அவர்கள் புலி என்று சொன்ன விலங்கை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் அது புலி அல்ல புலி வேஷத்தில் இருந்த நாய்.
அந்தப் பகுதியை சேர்ந்த சில விஷமிகள் தெரு நாய் உடலில் புலியைப் போல கோடுகளை பெயிண்டில் வரைந்து நாயை வீதிகளில் உலாவ விட்டுள்ளனர்.
இந்த புலி வேட நாய் கடந்த 2 நாட்களாக குறிஞ்சி நகர் பகுதியில் உலாவி வருகிறது. இது குறித்து லாஸ்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாய்க்கு புலிவேஷ மிட்ட விஷமிகள் யார்? என்று அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.






