என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள் போராட்டம்"

    • மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்துதரக்கோரியும் மேலும் கல்வி கட்டணத்தை திருப்பித்தர வலியுறுத்தியும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    சென்னை:

    சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி உள்ளது. அங்கு மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மாணவ-மாணவிகள் இன்று கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் கல்லூரியில் அடிப்படை வசதி செய்துதரக்கோரியும் மேலும் கல்வி கட்டணத்தை திருப்பித்தர வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
    • தேர்வு கட்டணம் பேப்பர் ஒன்றுக்கு ரூ 100-ல் இருந்து 140-ம், ரூ.160-ல் இருந்து ரூ.220 ஆகவும் உயர்ந்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் உள்ள தனியார் கல்லூரிகளில் தேர்வு கட்டணம், சான்றிதழ் கட்டணம், நுழைவு கட்டணங்கள் மிக கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறி அதனை கண்டித்து கல்லூரி மாணவர்கள், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கல்லூரிகளுக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் மற்றும் அனைத்து கட்டணங்களையும் கடுமையாக உயர்த்தியுள்ளனர்.

    இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுவதோடு மட்டுமில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

    தேர்வு கட்டணம் பேப்பர் ஒன்றுக்கு ரூ 100-ல் இருந்து 140-ம், ரூ.160-ல் இருந்து ரூ.220 ஆகவும் உயர்ந்துள்ளது.

    சான்றிதழுக்கு ரூ.500 ஆக இருந்த கட்டணம் தற்போது ஆயிரமாக உயர்ந்துள்ளது. நுழைவு கட்டணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.10 ஆயிரமாகவும், இது போல் இதரக்கட்டணங்களும் பல மடங்கு அதிகமாக உயர்த்தியுள்ளது. இதனைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணத்தை கைவிட வலியுறுத்தியும் கல்லூரிகளுக்கு செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் கல்லூரியில் அடிப்படை வசதிகளான குடிநீர் குழாய், கழிப்பிடம் மற்றும் விளையாட்டு மைதானம் பராமரிப்பு இல்லாமல் உள்ளதாக கல்லூரி நிர்வாகத்திடம் மாணவர்கள் புகார் செய்தனர்.

    ஆனால் சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் இன்று காலை கல்லூரி மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:-

    மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றது. எனவே இனியும் அலட்சியம் காட்டாமல் குடிநீர் மற்றும் கழிப்பிடம் வசதியை உடனே செய்து தர வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×