என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீட்பு பயிற்சி"

    • முதலுதவி, ஆபத்து காலத்தில் ஸ்ட்ரெச்சர் அமைத்தல் போன்ற ஒத்திகை பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.
    • பயிற்சியில் தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவின் தலைமை கமாண்டர் சந்தீப்குமார் உள்ளிட்ட 25 காவலர்கள் ஈடுபட்டனர்.

    திருப்பூர் 

    திருப்பூர் மாவட்டத்தில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள முன்னெச்சரிக்கைகள், தடுப்பு நடவடிக்கை ஒத்திகை தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவினர் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 தாலுகாக்களில் நடைபெறுகிறது. இதன்படி திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒத்திகை நடைபெற்றது. பயிற்சியில் தேசிய பேரிடர் மீட்புப்படை குழுவின் தலைமை கமாண்டர் சந்தீப்குமார் உள்ளிட்ட 25 காவலர்கள் ஈடுபட்டனர். சி.பி.ஆர்., எப்.பி.ஓ. பயிற்சி, வெள்ளம் கால மீட்பு பயிற்சி, முதலுதவி, ஆபத்து காலத்தில் ஸ்ட்ரெச்சர் அமைத்தல் போன்ற ஒத்திகை பயிற்சி மாணவ-மாணவிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது. இதில் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதுபோன்று திருப்பூர் குமரன் பெண்கள் கல்லூரியிலும் மாணவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. 

    • புதிதாக சேர்ந்தவர்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு குறித்து விளக்கப்பட்டது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சியில் 60 வீரர்கள் பங்கேற்றனர்

    பொள்ளாச்சி,

    பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புப்படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.

    கோவை அருகே தொப்பம்பட்டியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) பயிற்சி கல்லூரி உள்ளது. இங்கு பணியாற்றும் போலீசாருக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி நடைபெற்றது. பயிற்சி பள்ளி முதல்வர் ஐ.ஜி.ஸ்ரீஅஜய் பரதன் உத்தரவின் பேரில் துணை கமாண்டர் ஹரிகுமார் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுவாசமாலா, கோஷ், நேபால் சிங் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பயிற்சியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

    இது குறித்து மத்திய ரிசர்வ் படை அதிகாரிகள் கூறும்போது, மத்திய ரிசர்வ் படையில் புதிதாக பணியில் சேர்பவர்களுக்கு பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.

    வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது, காலி பாட்டில், பிளாஸ்டிக் டிரம் ஆகியவற்றை மீட்பு கருவிகளாக கொண்டு மீட்பது, நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது மற்றும் கட்டிங்கள் இடிந்து விழுந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்பது, மண்சரிவில் சிக்கியவர்களை காப்பாற்றுவது, ெரயில் விபத்து காலத்தில் பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் செயல்படும் விதம் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    ஆழியாறு அணை நீரில் படை வீரர்கள் படகில் சென்று ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

    டிரம், கேன், மரத்துண்டுகளை கொண்ட படகை தயார் செய்து, அணையின் மைய பகுதிக்கு கொண்டு சென்று நீரில் தத்தளிக்கும் நபர்களை மீட்டு கரைக்கு கொண்டு வருவது மற்றும் அவர்க ளுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்று தத்ரூ பமாக செய்து காண்பித்தனர். இதில் 60 வீரர்கள் பங்கேற்றனர் என்றனர்.

    ×