என் மலர்
நீங்கள் தேடியது "இன்சூரன்ஸ் நிறுவனம்"
- 2014ஆம் ஆண்டு விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு.
- வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனத்தை ஓட்டிச் சென்றதால் விபத்து ஏற்பட்டது நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டது.
வேகமாகவும், கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டி உயிரிழந்த நபருக்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் இழப்பீடு வழங்க தேவையில்லை என்ற கர்நாடக மாநில உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளனது.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் 18ஆம் தேதி என்.எஸ். ரவிஷா கார் ஓட்டிக்கொண்டு செல்லும்போது விபத்து ஏற்பட்டது. காரில் அவரது தந்தை, சகோதரி மற்றும் சகோதரி குழந்தைகள் இருந்தனர்.
சாலையில் கார் விபத்து ஏற்பட்டதில் என்.எஸ். ரவிஷா மட்டும் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அவரது சடப்பூர்வ வாரிசுதாரர்கள் இழப்பீடு கேட்டு கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தை நாடினர். அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல், கவனக்குறையாக, மிக வேகமாக காரை ஓட்டி, சாலையில் கவிழ்த்து விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனால் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் எந்தவிதமாக இழப்பீடும் சட்டபூர்வ வாரிசுதாரர் பெற முடியாது என கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவை தற்போது உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
- நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு
- இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையைச் சேர்ந்த ராதிகா என்பவர் தனது குடும்பத்திற்காக ஒரு தனியார் இன்ஸ்யூரன்ஸ் நிறுவனத்திடம் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார்.
அதன் பின்னர் அவரது கணவர் உடல்நலக்குறை வால் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலுள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் பணம் செலுத்தி சிகிச்சை பெற்றுள்ளார். அதன் பின்னர் இந்த பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில் பணத்தை தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் சரியான காரணங்களை கூறாமல் சிகிச்சைக்காக செலுத்தப்பட்ட பணத்தை தர மறுத்துள்ளது.
இதைக் கண்ட புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி யுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளாகி கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த கன்னியாகுமரி மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டினை சுட்டிக் காட்டி பாதிக்கப்பட்ட நுகர் வோருக்கு சிகிச் சைக்காக ஏற்கனவே செலவழித்த ரூ.59,693, நஷ்டஈடு ரூ.20ஆயிரம் மற்றும் வழக்கு செலவு தொகை ரூ.5 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.84,693 ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என தலைவர் சுரேஷ், உறுப்பினர் ஆ.சங்கர் ஆகியோர் உத்தர விட்டனர்.






