என் மலர்
நீங்கள் தேடியது "நூதன ஆர்ப்பாட்டம்"
- மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கழுத்தில் மணியை கட்டிக்கொண்டு ஜல்லிக்கட்டு வீரர்கள் நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- காளைகளுக்கு சந்தனம், குங்குமம் பூச அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
மதுரை
மதுரை முடக்கத்தான் பகுதியை சேர்ந்த ஜல்லிக்கட்டு பயிற்சி மைய தலைவர் மணி என்பவரது தலைமையில் 30-க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு வீரர்கள், காளை உரிமையாளர்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் கழுத்தில் மணியை கட்டிக்கொண்டு நுழைவு வாயில் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
கோரிக்கை மனுவில் ஜல்லிக்கட்டு காளைகளை குல தெய்வமாக கருதி வளர்த்து வருகிறோம். ஜல்லி க்கட்டு போட்டியின்போது காளைகளுக்கு சந்தனம், குங்குமம் திருநீரு பூசக்கூடாது. சலங்கை மணியை கழுத்தில் கட்டக்கூடாது போன்ற கட்டுப்பாடுகளை அதிகாரிகள் விதிக்கின்றனர். இது எங்களின் உணர்வுகளை அவமதிக்கும் செயலாகும்.
எனவே ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு சந்தனம், குங்குமம் பூசவும், சலங்கை மணியை கழுத்தில் அணிவிக்க அனு மதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
- கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
- பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு அதிகாாிகளை தேடுவது போன்று செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுக்களுக்கு உரிய மனுதாரர்களுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கை விளங்குடன் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- சேலம் மாநகரில் அதிகரித்து வரும் கொலைகள், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுபடுத்திட வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கை விளங்குடன் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாநகரில் அதி கரித்து வரும் கொலைகள், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுபடுத்திட வேண்டும். போதை பொருட்கள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்திட வேண்டும்.
சமூக விரோதிகள் நடமா டும் பகுதிகளை அடை யாளப்படுத்தி கூடுதல் போலீசாரை ரோந்து பணிகளில் ஈடுபடுத்திட வேண்டும். பழுதடைந்த சி.சி.டி.வி காமிராக்களை பராமரித்திட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாந கர செயலாளர் பிரவீன்கு மார் தலைமை தாங்கினார். கிளை செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் சண்முகராஜா கண்டன உரையாற்றினார். மாநகரக் குழு உறுப்பினர் ராஜேஷ்கு மார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






