என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்
- கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்தது
- பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்களை துணியால் கட்டிக்கொண்டு அதிகாாிகளை தேடுவது போன்று செய்து நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது, கடந்த மாதம் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் அளித்த மனுக்களுக்கு உரிய மனுதாரர்களுக்கு அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
தொடர்ந்து பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Next Story






