என் மலர்
நீங்கள் தேடியது "தொழிலாளர் நல நிதி"
- வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த, வேலையளிப்பவர் கடமைப்பட்டவராவார்.
- 2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை 31.1.2023-ந்தேதிக்கு வங்கி வரைவோலை அல்லது காசோலையாக அனுப்பி வைக்க வேண்டும்.
சென்னை:
தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய செயலாளர் யாஸ்மின் பேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், ஐந்தும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.20, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ஆக மொத்தம் ரூ.60 வீதம் தொழிலாளர் நலநிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.
வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த, வேலையளிப்பவர் கடமைப்பட்டவராவார். எனவே 2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை 31.1.2023-ந்தேதிக்கு முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600 006 என்ற முகவரிக்கு வங்கி வரைவோலை அல்லது காசோலையாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படுகிறது.
- ஆண்டுக்கு 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலை அளிப்பவர் கடமைப்பட்டவர்.
நாமக்கல்:
தொழிலாளர் நலத்துறை நாமக்கல் உதவி ஆணையர் நந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம் சார்பில் தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படுகிறது. தொழிலாளர் நல நிதி சட்டத்தின் படி தொழிற்சா லைகள், மோட்டார் போக்கு வரத்து நிறுவனங்கள், 5-க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிர்வாகங்கள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும்.
ஆண்டுக்கு 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த வேலை அளிப்பவர் கடமைப்பட்டவர். எனவே 2022-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நலநிதி பங்குத் தொகை யினை வருகிற 31-ந் தேதிக்குள் செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், டி.எம்.எஸ் வளாகம் ,தேனாம்பேட்டை சென்னை என்ற முகவரிக்கு வங்கி வரவோலை அல்லது காசோலையாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணைய வழியில் செலுத்துவதற்கு வசதியாக www.lwb.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
- 2020-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி தொகையை, நிறுவனங்கள் இணையதளம் மூலமாக செலுத்தலாம்.
திருப்பூர்
தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத்தோட்ட நிறுவனங்கள், 5 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.10, ஒவ்வொரு தொழிலாளிக்கு வேலையளிப்பவர் பங்காக ரூ.20-ம் சேர்த்து மொத்தம் ரூ.30 வீதம் தொழிலாளர் நல நிதி பங்குத்தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும். அதன்படி 2021-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதியை வருகிற 31-ந் தேதிக்குள் வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
அனைத்து நிறுவனங்களும் தொழிலாளர் நல நிதி செலுத்த வேண்டும். நிறுவனங்கள் தொழிலாளர் நல நிதியை இணைய வழியில் செலுத்துவதற்கு வசதியாக www.lwb.tn.gov.in இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான தொழிலாளர் நல நிதி தொகையை, நிறுவனங்கள் இணையதளம் மூலமாக செலுத்தலாம். மேலும் The Secretary, Tamil nadu Labour Welfare Board, chennai-600 006 என்ற பெயருக்கு வரைவோலையாக வருகிற 31-ந் தேதிக்குள் செயலாளர், தமிழ்நாடு தொழி லாளர் நல வாரியம், டி.எம்.எஸ்.வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600 0006 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.






