என் மலர்
நீங்கள் தேடியது "விஷ பூச்சி கடித்து"
- சம்பவத்தன்று பிகாஸ் போக்தாவை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது.
- சிறிது நேரத்தில் பிகாஸ் போக்தாவுக்கு வலது கை முழுவதும் வலி ஏற்பட்டு வீங்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு, டிச. 6-
ஒடிசா மாநிலம் பவாத் மாவட்டம் தாமோதர்பூர் பகுதியை சேர்ந்தவர் பிகாஸ் போக்தா (20).
இவர் ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டை அடுத்த எம்.எஸ்.மங்கலம் கிராமத்தில் வாவி காட்டு வலசு பிரிவில் உள்ள ஒரு தனியார் மில்லி தங்கி 5 வருடமாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று பிகாஸ் போக்தாவை விஷ பூச்சி ஒன்று கடித்து விட்டது.
இதனையடுத்து அவர் போன் மூலம் தனது அண்ணன் தரணி போக்தாவுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் சிறிது நேரத்தில் பிகாஸ் போக்தாவுக்கு வலது கை முழுவதும் வலி ஏற்பட்டு வீங்கி மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடி யாக அவரது அண்ணன் தம்பியை மீட்டு சிகிச்சைக்காக கொல்லம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு பிகாஸ் போக்தா அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.
- சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அழுகுளி பிள்ளையார் கோயில் துறையில் வசித்து வருபவர் கந்தசாமி. இவரது மனைவி சரஸ்வதி (வயது 66). இந்நிலையில் சம்பவத்தன்று சரஸ்வதியை விஷப்பூச்சி கடித்துள்ளது.
இதையடுத்து உறவினர்கள் சரஸ்வதியை கோபி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வந்த சரஸ்வதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பின்னர் இதுகுறித்து சரஸ்வதியின் மகன் ரகுநாதன் கடத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






