என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிளக்ஸ் போர்டுகள்"

    • அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமி ஆகஸ்டு 4-ந்தேதி களக்காடு, நாங்குநேரி வழியாக ரோடு-ஷோ நடத்த இருக்கிறார்.

    மதுரை:

    நெல்லையைச் சேர்ந்த காமராஜ் ஐகோர்ட்டு மதுரை அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், நான் அ.தி.மு.க.வின் நெல்லை மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட இணைச் செயலாளராக பொறுப்பில் இருக்கிறேன். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    இந்நிலையில் ஆகஸ்டு 4-ந்தேதி களக்காடு, நாங்குநேரி வழியாக 'ரோடு-ஷோ' நடத்த இருக்கிறார். ஆகவே அதை முன்னிட்டு படலையார் குளம் கிராமம் முதல் கடம்போடுவாழ்வு வரை 100 வரவேற்பு பிளக்ஸ் போர்டுகளை வைக்க அனுமதி கோரி நெல்லை களக்காடு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.

    ஆகவே ஆகஸ்டு 4-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக வரவேற்பு பிளக்ஸ் போர்டுகளை வைக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், களக்காடு, சாலைபுதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனுதாரரின் மனுவை பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • சாலையோரங்களில் அதிகரிக்கும் பிளக்ஸ் போர்டுகளால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • கீழக்கரை நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா? என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியில் தினமும் ஏர்வாடி, சாயல்குடி, தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, நாகர்கோவில், ராமேசுவரம் ஆகிய ஊர்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் பிரதான சாலையாக உள்ளது.

    கீழக்கரை முக்கு ரோடு திருப்பத்தில் விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அனுமதியின்றி பேனர்கள் வைக்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராமநாதபுரம் கலெக்டர் அறிவித்த நிலையில் கீழக்கரையில் பிளக்ஸ் போர்டு ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது.

    சென்னையில் பிளக்ஸ் பேனர் விழுந்து பெண் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பிளக்ஸ் பேனர்கள் வைப்பதற்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இதனையும் பொருட்படுத்தாமல் பலரும் பிளக்ஸ் பேனர்களை வைத்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்கா மல் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

    விதிமுறை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    ×