என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைனான்சியர்"

    • சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக இருந்ததை நாராயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர்.
    • சுகுமார் மிரட்டல் குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    திண்டுக்கல்:

    பழனியை சேர்ந்தவர் சுகுமார் (வயது42). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர்கள் பழனி நேதாஜிநகரை சேர்ந்த நாராயணசாமி (44) மற்றும் அடிவாரத்தை சேர்ந்த துர்க்கைராஜ் (45).

    சுகுமாரிடம் அதே பகுதியை சேர்ந்த செந்தில் மனைவி ராணிசித்ரா (40) என்பவர் பணம் வட்டிக்கு வாங்கி இருந்தார். சுகுமாரிடம் பணம் நிறைய இருப்பதை பார்த்து அதனை அபகரிக்க முடிவு செய்தார். அதன்படி அடிக்கடி ராணிசித்ரா வீட்டிற்கு சுகுமாரை வரவழைத்து அங்கு மது குடித்து ஒன்றாக இருந்துள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகுமாரும், ராணி சித்ராவும் ஒன்றாக இருந்ததை நாராயணசாமி, துர்க்கைராஜ் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர்.

    பின்னர் அந்த வீடியோவை சுகுமாரிடம் காட்டி ரூ.10 லட்சம் பணம் தராவிட்டால் இந்த வீடியோவை உனது குடும்பத்திற்கு அனுப்பி விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சுகுமார் இது குறித்து பழனி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் ராணிசித்ரா மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து பணம் கேட்டு மிரட்டியது உறுதியானது. இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் இவர்கள் இதேபோல வேறு சிலரிடமும் மது குடிக்க வைத்து ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் பழனி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். ராணிசித்ரா நிலக்கோட்டை சிறையிலும், துர்க்கைராஜ், நாராயணசாமி ஆகியோர் மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    • இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் புகுந்து மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர்.
    • முக்கிய குற்றவாளியான திமுக ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு மகேஸ்வரனை கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்துள்ள தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகர். அப்பகுதியில் பைனான்சியராகவும், வேளாங்கண்ணியில் தங்கும் விடுதி ஒன்றும் நடத்தி வந்தார்.

    இவருக்கும், ஒரு சிலருக்கும் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த 17.8.22 அன்று மனோகர் வேளாங்கண்ணி முச்சந்தி அருகே உள்ள அவரது அலுவலகத்தில் அவரது நண்பர் மணிவேலுடன் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கடையின் உள்ளே புகுந்து அங்கிருந்த மனோகரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளனர். இதனை தடுத்த மணிவேலு என்ப வருக்கும்கையில் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

    மனோகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை தொடர்ந்து.

    இது சம்பந்தமாக 19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு 18 பேர் கைது செய்யப்பட்டு ஒருவரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் கொலையின் முக்கிய குற்றவாளியான தெற்குப்பொய்கைநல்லூர் திமுக ஊராட்சி மன்ற தலைவர் அப்பானு மகேஸ்வரனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவில் அப்பானு மகேஸ்வரன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ×