என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிரட்டி வழிப்பறி"

    • வாலிபர் ஒருவர் திடீரென சங்கரை வழிமறித்து பணம் ேகட்டு மிரட்டினார்.
    • போலீசார் தினேஷ் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கோவை

    திருச்சியை சேர்ந்தவர் சங்கர் (வயது 32). டாஸ்மாக் கடை ஊழியர். இவர் சம்பவத்தன்று உக்கடம்- பேரூர் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென சங்கரை வழிமறித்தார்.

    பின்னர் அந்த வாலிபர் சங்கரிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அதற்கு அவர் தன்னிடம் பணம் இல்லை என கூறி தரமறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காட்டி மிரட்டினார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சங்கர் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    அவர்கள் வருவதை பார்த்து அந்த வாலிபர் சங்கர் சட்டை பாக்கெட்டில் இருந்த பணத்தை பறித்து அங்கிருந்து தப்பி சென்றார்.

    இதுகுறித்து சங்கர் பெரியகடை வீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் சங்கரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த பெயிண்டர் தினேஷ்குமார் (வயது 21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தினேஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர்.

    கோவை சிவானந்த காலனியை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (வயது 47). இவர் டாடாபத் 2-வது வீதியில் அச்சகம் நடத்தி வருகிறார். சம்பவத்தன்று ஆனந்தகுமார் அச்சகத்திற்க சென்றார்.

    அப்போது அங்கிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள அலுமினியம் தகடுகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து அவர் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி திருடர்களை தேடி வருகின்றனர். 

    • வாலிபர்களை மடக்கி பிடித்த பொதுமக்கள்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் டி.ஐ.ஜி பங்களா பின்புறம் பகுதியை சேர்ந்தவர் இருதயராஜ் (வயது 60) இவர் நேற்று காலை வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே நடந்து சென்றார்.

    அந்த வழியாக வந்த 2 பேர் திடீரென இருதய ராஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 2500 ரூபாய் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இருதயராஜ் கத்தி கூச்சலிட்டார். அங்கிருந்த பொதுமக்கள் தப்பி ஓடிய இருவரையும் பிடித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வேலூர் தோட்ட பாளையத்தைச் சேர்ந்த ராஜேஷ் (31) சரத்குமார் (27) என்பது தெரிய வந்தது.

    இவர்கள் மீது ஏற்கனவே வேலூர் வடக்கு மற்றும் தெற்கு போலீஸ் நிலையங்களில் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது. ‌ போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

    ×